பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

பாதிரிகள் மகான்களா?


பாதிரிகள் மகான்கள் அல்ல. அவர்களிடம் எந்த ஆத்ம சக்தியும் கிடையாது. வயிற்றுப் பிழைப்புக்காக பிரசங்கம் செய்கிறார்கள். பணத்தையே குறிக்கோளாக கொண்டவர்கள். ஒரு வேளை உண்பவன் யோகி இரு வேளை உண்பவன் போகி. மூன்று வேளை உண்பவன் ரோகி. உண்மையான யோகிக்கு ஒரு வேளை உணவளித்தால் ஆயிரம் கோவில் கட்டியதற்கு சமம் என்கிறது இந்து மதம். ஆனால் ஆத்மசக்தியைப் பெறுவதற்கான யோகா, பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகள் இல்லாமல் மூன்று வேளையும் மூக்குப்பிடிக்க அசைவமும் உண்பதால் காம, பண வெறியர்களாக இருக்கிறார்கள். பண ஆசைகாட்டிதான் மதம் மாற்றுகிறார்களே ஒழிய திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் போல் அற்புதங்கள் செய்து காட்டியதில்லை “வழிக்காக பையையாவது, காசையாவது, அப்பத்தையாவது, இரண்டு அங்கிகளையாவது பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்க வேண்டாம் (மத்.10.10, லூக்.9.3) பண ஆசையே அனைத்து தீமைகளுக்கும் வேராக இருக்கிறது. வானத்துப் பறவைகளை நோக்குங்கள்.அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை (மத்.6.26, லூக்.12.24) “ என்று அடுத்த வேளை உணவை சேர்த்து வைத்துக்கொள்ளாமல்  வாழச்சொல்கிறார். ஆனால் எந்த பாதிரியும் இதுபோல் வாழ்ந்து காட்ட தயாராக இல்லை.

இவ்வசனங்களுக்கும்  மேலாக ஏசு பிறப்பதற்கு முன்பிருந்தே நம் சாதுக்கள் , மகான்கள் ஒரு கோவணத்துடனோ அதுவும் இல்லாமலோ இமயமலையின் கடும் குளிரிலும் தவம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்போதும் அற்புதங்கள் செய்து காட்டி வரும் அப்படிப்பட்ட சாதுக்களை கும்பமேளாவில் காணலாம். இப்படிப்பட்ட சாதுக்களை நம்பாமல் டிஜிட்டல் போர்டில் விளம்பரம் செய்து,  கோட், சூட் அணிந்து ஏசி அறையில்  குழந்தை குட்டிகளோடு சொகுசாக வாழும் போலி குருக்களாகிய பாதிரிகளை நம்பி மோசம் போகாதீர்கள். இவர்களிடம் வீட்டில் ஜெபம் செய்ய சொல்வதும் ஆசீர்வாதம் பெறுவதும் ஜெபக்கூட்டங்களுக்கு செல்வதும் காணிக்கை வழங்குவதும் வீண்.

       “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள். சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்போது அவர்கள் சொஸ்தமாவார்கள்.(மாற்கு.16.17) வியாதியஸ்தரை சொஸ்தமாக்குங்கள். மரித்தோரை எழுப்புங்கள் (மத்,10.8) கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் இந்த மலையைப் பார்த்து அப்புறம் போ என்று சொல்ல அப்புறம் போம். (மத்.17.20) ~உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி ஜெபம் பண்ணக் கடவர்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை ரட்சிக்கும்.| (யாக்.5.14)” இவ்வாறு பல அற்புதங்கள் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் என பைபிளில் சொல்லப்பட்டிருந்தாலும், இதில் எந்த அற்புதத்தையும் தங்களால் செய்ய முடியாது என்று தெரிந்தும் பாதிரிகள் மனசாட்சியை கர்த்தரிடம் அடகு வைத்துவிட்டு வயிற்றுப்பிழைப்புக்காக பிரசங்கம் செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக