பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

ஏசு வருவாரா?


    ஏசு இந்த ஆண்டு வருகிறார். அடுத்த ஆண்டு வருகிறார். இதோ வருகிறார். அதோ வருகிறார். என்கிறார்கள்.

ஆனால் ஏசு நிச்சயமாக வரமாட்டார். அந்(இயேசு வரும்) நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.(ஆபத்து வரும்) (மாற்கு.13.17) என்று பைபிள் கூறுகிறது. இந்த பெண்கள் என்ன பாவம் செய்தார்களோ? எனவே ஏசு கருணையுள்ளவராக இருந்தால் இந்த தாய்மார்களின் நலனுக்காகவாவது வரமாட்டார். 

ஏசு இப்படி இருந்தார் என்பதற்கு அவருடைய படமோ, சிற்பமோ எதுவுமே கிடைக்கப்பெறவில்லை. கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு படத்தைத்தான் ஏசு என்று வணங்குகின்றனர். கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள்.
இவை வேற்று நாட்டவர் வணங்கும் ஏசுவின் படங்கள்.


        

         




இதில் முதல் படத்தில் இருக்கும் ஆப்பிரிக்க  ஏசுவை இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏசு என்று ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயம் ஏற்க மாட்டார்கள். அவர் அற்புதங்கள் செய்து காட்டினாலும் இது அந்திக்கிறிஸ்துவின் வேலை என்று நம்பமாட்டார்கள். ஏசு இவர்கள் செய்யும் அயோக்கியத்தனங்களைக் கண்டித்தால் கொலைசெய்யவும் தயங்க மாட்டார்கள். தன்னை வணங்காதவர்களை நரகத்துக்கு அனுப்பும் ஏசு கடவுளே இல்லை. ஏசு இறந்தபின் இன்றுவரை இறந்தவர்கள் ஆயிரம்கோடிக்கும் அதிகம். கிறிஸ்தவர்களே ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கோடிகணக்கில் கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்தனைகோடி மக்களுக்கும் நியாயத்தீர்ப்பு ஏசு வழங்கி முடிக்க  எத்தனை ஆண்டுகள் ஆகும்?. இது அபத்தமாக அல்லவா உள்ளது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக