பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

பாஸ்டர்.புஷ்பராஜ் அவர்களின் கேள்வி பதில்


சனி, 24 டிசம்பர், 2011   

கிறிஸ்தவர்கள் செய்யும் பிராடுத்தனங்களை கிறிஸ்தவர்களே வெளிப்படுத்த ஆரம்பித்து உள்ளனர். இதுவும் சமூகநலனுக்கு உதவும் ஒரு தொண்டே. கிறிஸ்தவத்தில் இத்தனை கேடுகள் இருக்கும்போது இந்த கிறிஸ்தவர்கள் அதனை விட்டு வெளியேறாமல் இருப்பது அவர்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. ஜாமக்காரன் என்ற தளத்திலிருந்து.  

கேள்வி: கேரளாவில் கள்ள சாமியார்களை கேரளா அரசாங்கம் பிடித்து கைது செய்து கொண்டிருப்பதுபோல் இந்தியா முழுவதுமுள்ள போலிசாமியார்களும் கைது செய்யப்பட வேண்டும்? பதில்: கேரளாவில் மற்றொன்றும் நடந்துள்ளது, கவனித்தீர்களா? போலிசாமியார்களைமட்டும் போலீஸ் பிடிக்கவில்லை. கிறிஸ்தவ போலிஊழியர்களையும் பிடித்துள்ளது. சூரியா TVயிலும், மற்றொரு கேரளா TVயிலும் ஜெபத்தில் பெயர் - வியாதி இவைகளை சொல்லி அழைத்து மக்களை ஏமாற்றும் தமிழ்நாட்டு பிரபல Bபிராண்டுகளைப்போல கேரளாவிலும் பொய்தீர்க்கதரிசனம் சொல்லும் ஊழியர்கள் எழும்பிவிட்டார்கள். அதில் சில பெந்தேகோஸ்தே ஊழியர்களை போலீஸ் வளைத்துள்ளது. கேரளாவில் கோட்டயம் என்ற இடத்தில் சொர்க்கவிருந்து என்ற பெயரில் டிவியிலும், பொதுகூட்டங்களிலும் ஜெபத்தில் பெயர் சொல்லும் பாஸ்டர்.தங்கு என்பவரின் அலுவலகத்தை போலீஸ்சுற்றி வளைத்து பாஸ்டர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்களை ஏமாற்றுவதாகவும் போலீஸ் அறிந்து 2008 மே 24ம் தேதி சனிக்கிழமை DSP.மது அவர்களின் தலைமையில் அவரின் ஸ்தாபனத்தை சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். பல லட்சரூபாய் டாக்குமென்ட்டுகளும், 1¼ லட்சம் அமெரிக்க டாலர்களும், 1.35 லட்சம் வெளிநாட்டு டிராவிலர் செக்குகளும், ஒரே ஆள் பெயரில் 2 பாஸ்போர்ட்களும் அகப்பட்டன. அப்படியே பாஸ்டர்.தங்கு அவர்களின் வீடு காரப்புழா என்ற இடத்தில் உள்ளது. அங்கும் சோதனை நடந்தது. தமிழ்நாட்டிலும் மக்களை பொது மேடைகளில் இயேசுவின் பெயரில் பொய்சொல்லி பிரசங்கிக்கும் கள்ளதீர்க்கதரிசிகள் மிக அதிகம் உண்டு என்பதை நாமே அறிவோமே.  

கேரளா மாதிரி தமிழ்நாட்டிலும் நடவடிக்கை வந்தால் பரலோகம் போய்வருவதாகவும் கூறும் ஊழியரையும், பிதாவையும், குமாரனையும், பரிசுத்த ஆவியானவரையும் தனித்தனியாக கண்டதாக பகிரங்கபொய்களை அள்ளிவிடும் ஏஞ்சல் TVயில் வரும் ஊழியர்களையும் பிடிக்கவேண்டிவரும். அவர்கள் பொதுமக்களைத்தானே TV மூலம் ஏமாற்றுகிறார்கள்! எயிட்ஸ் வியாதி சுகமானதாகவும், செத்துப்போனவர்களை உயிரோடு எழுப்பியதாகவும், தினம் நரகத்துக்கு போய் வருவதாகவும் கூறும் இப்படிப்பட்ட பொய்யர்கள் எல்லாரும் எப்போது போலீஸ்ஸில் அகப்படுவார்களோ! இவர்களால் எத்தனை லட்சம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்! கர்த்தருடைய நாமமும் இவர்களால் தூஷிக்கப்படுகிறதே! பாவம் செய்யும் நபர்களும், தவறான ஊழியங்களை செய்யும் ஊழியர்களும் பொதுவாக எல்லா மனிதர்களும் தண்டனைகளை நியாய தீர்ப்புக்குபின்தான் அனுபவிப்பார்கள். ஆனால் சிலருக்கு அவர்கள் செய்த பாவத்துக்கு அவர்கள் இந்த உலகில் உயிரோடு இருக்கும்போதே தண்டனை கிடைத்து விடுகிறது. அந்த சிலரைத்தான் இப்போது கேரளா போலீஸ் பிடித்திருக்கிறது. சுனாமி வரும் என்று தீர்க்கதரிசனம் கூறி மக்களை ஏமாற்றி தீர்க்கதரிசி என்ற பெயரில் SMS செய்திகளை அறிவித்த சென்னை ஒரு ஊழியருக்கும் போலீஸ்சும், கலெக்டரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்படியே செத்துப்போனவர்களை உயிரோடு எழுப்பினேன் என்று பொய் சொன்ன ஊழியர்களுக்கும், எயிட்ஸ் வியாதியை சுகப்படுத்தினேன் என்று பொய் சொல்லி பொதுமக்களை ஏமாற்றிய ஊழியக்காரர்களுக்கும் போலீஸ்சும், கலெக்டரும் எச்சரிக்கை விடுவது நல்லது. காரணம், குறிப்பிட்ட இந்த ஊழியர்கள் கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, பொது மக்களையும் ஏமாற்றினார்களே!

 கேள்வி: சகோ.தினகரன் அவர்களின் வல்லமை முகாமில் பயின்ற ஒருவர் தேனி என்ற ஊரிலிருந்து வல்லமை கோபுரம் என்ற பத்திரிக்கை நடத்துகிறார். அந்த பத்திரிக்கையை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். 2008 செப்டம்பர் மாத அவருடைய பத்திரிக்கையில் ஒரு பெண் ஜெபகுறிப்பு அனுப்பினாளாம். கூட்டத்தில் நான் அந்த ஜெபகுறிப்பை பார்க்கவில்லை என்றும், ஆனால் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இயேசுகிறிஸ்து அந்த கடிதத்தைப் பார்த்து அதன் விவரத்தை தன்னிடம் கூறினார் என்று அந்த ஊழியர் எழுதியுள்ளார். இந்த ஏமாற்றுதனம் எங்குபோய் நிற்கும்?  

பதில்: நான் தான் முன்பே எழுதினேனே! சகோ.தினகரன்போல் தினகரன் நடத்தும் வல்லமை முகாமில் பயின்றவர்கள் இன்று தமிழ்நாடெங்கும் தொற்றுவியாதிகிருமியைப்போல இவர்கள் அனுதாபிகள்கூடி ஜெபக்கூட்டம் என்ற பெயரில் ஜனங்களை கூட்டி ஜெபம் நடத்துகிறார்கள். அதில் பெயர் அழைப்பதும், தீர்க்கதரிசனம் கூறுவதும் முன்பைவிட கூடுதலாக பெருகும் என்று எழுதினேன். அதில் ஒருவர்தான் நீங்கள் குறிப்பிட்ட ஊழியர் சகோ.மோகன் சி.லாசரஸ் கூறிய பொய்களைப்போலவே இவர் கூறியிருக்கிறார். நான் அந்த ஜெபகுறிப்பைப்பார்க்கவில்லை. ஆனால் என் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருக்கிற இயேசுகிறிஸ்துதான் அதை படித்து என்னிடம் சொன்னார் என்று இயேசுகிறிஸ்துவை இவருடைய வேலைக்காரனாக பாவித்து பகிரங்க பொய்யை அறிவித்துள்ளார்

 இப்போது இன்னொன்றையும் யோசித்துப்பாருங்கள். மரித்த சகோ.தினகரன் அவர்கள் தன்னுடைய வீட்டில் காலை ஜெபத்தின்போது தினம் இயேசுகிறிஸ்து வந்து தன் அருகே உட்கார்ந்து ஒரு மணி நேரமாவது பேசிவிட்டுதான் போவார் என்று பல தடவை அவர் கூறியதும், எழுதியதும் நாம் அறிவோமே! அப்படியிருக்க அந்த அவர்களுடைய Mr.அருள்நாதர் அவரின் மரணத்தைப்பற்றி, வியாதியைப்பற்றி, நடக்கப்போகும் கார் விபத்தைப்பற்றி ஏன் கூறவல்லை? அவர் கூறியது கடைந்தெடுத்த பொய்யாய் உங்களுக்கு தோன்றவில்லை? அவரின் வல்லமை முகாமில் பயின்றவர்களும், அதே கடைந்தெடுத்த பொய்யில் ஊறுகாய்போல் ஊறி, வெளிவந்து இப்படிப்பட்ட பொய்களைக்கூறி ஜனங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை மக்கள் சீக்கிரம் உணர்ந்துக்கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக