பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

இந்து மத பெருமைகள்.

இந்து மதத்தில் அறிவியல்

நம் வழிபாட்டு முறைகளில் ஆன்மீகம், அறிவியல் மற்றும் ஆரோக்கியம் உள்ளது. அக்னிஹோத்ரம், ஹோமம் செய்வதால் வைரஸ் கிருமிகள் மற்றும் கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஆயுளைக் கூட்டுகிறது. மந்திரங்கள் மூலம் பாம்புக்கடி, தேள்கடி, விஷங்கள் நீங்குகின்றன. யோகா, பிராணாயாமம் உடல்நலத்திற்கு உதவுகிறது என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்டு மேல் நாட்டவர்களும் பின்பற்றுகிறார்கள். திருநீறு தலைவலி, தலைப்பாரம் வராமல் காக்கிறது. மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமம் கிருமிநாசினியாகும். நம் முன்னோர்கள் காட்டிய வழிமுறைகளை முறையாகக் கடைபிடித்து வாழ்பவர்கள் பிற மதத்தினரை விட ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்க
Albuquerque,NM, Kirtland Fedaral Credit Union nrf;fpy; செக்கில் “HINDUISM IS MOST SCIENTIFIC ” என்று கொட்டெழுத்தில் அச்சிட்டுள்ளனர்.

        ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வுகாண ஒவ்வொரு ஸ்தலங்களும், மந்திரங்களும், பதிகங்களும் யாகங்களும் உள்ளன. சஷ்டி விரதம் இருந்தும், அம்மனுக்கு தொட்டில் கட்ட நேர்ந்து கொண்டும், புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தும் யாகம் செய்தும் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் ஏராளம். கடன் தொல்லை நீங்க, திருமணம் நடைபெற, கல்வியில் சிறந்து விளங்க, தொழிலில் முன்னேற்றம் காண பல புனித ஸ்தலங்களும், தீர்வு முறைகளும் உள்ளன. ஆனால் இவர்களுக்கு அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே வகையான ஜெபம்தான்.

 நம்மவர்கள் எத்தனையோ நாடுகளை வென்று ஆட்சி செய்திருந்தாலும் நம் மதத்தைப் பரப்ப மக்களை கொன்று ஒழித்ததில்லை. நமக்குள் சாதிச்சண்டைகள் இருந்திருந்தாலும் எந்த ஜாதியையும் வேட்டையாடி இல்லாமல் அழித்ததில்லை. ஆனால் கிறிஸ்தவம் செவ்விந்தியர்கள், பாகன்கள், மாயன்கள் என எந்தெந்த நாடுகளுக்குள் நுழைந்ததோ அவர்களின் வழிபாடு, கலாச்சாரம், இனத்தையே அழித்து பரவி வந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இவ்வாறு உருவாக்கப்பட்ட நாடுகள்.

இந்து மதம் சித்தர்களால் உருவாக்கப்பட்ட மதம்

நம்முடைய வழிபாட்டு முறையை உருவாக்கியவர்கள் சித்தர்கள், முக்காலம் உணர்ந்த ஞானிகள். நம் வழிபாட்டுமுறை மூலம் ரமணர், அரவிந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா, சகோதரி நிவேதிதா, மாதா அமிர்தானந்தமயி போன்ற ஏராளமான மகான்கள் உருவாகி உள்ளனர். கிறிஸ்தவ மதத்தில் 2000 ஆண்டுகளில் எத்தனை ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள்? பணவெறி படைத்தவர்களையும், காமக்கொடுரர்களையும்தான் ஏராளமாக உருவாக்கியிருக்கிறது.  .நம்மிடம் இதிகாசங்கள், 18 புராணங்கள், உபநிஷத்கள், நிகண்டுகள், சைவசித்தாந்தம், வேதாந்தம், சித்தர்களின் ஞானப் பாடல்கள்,  சிவஞானபோதம், மெய்கண்ட சாத்திரம், சிவஞான சித்தியார், பண்டார சாத்திரங்கள், சிவஞானபாடியம் , ஸ்மிருதிகள் என ஆயிரக்கணக்கான வேதபுத்தகங்கள் உள்ளன. இவை ஞானதிருஷ்டியில் எழுதப்பட்டவை. இத்தகைய ஞானதிருஷ்டியினால் பிறவிக்குருடரான சூர்தாசர் என்ற மகான் காணாமல் போனவை இருக்கும் இடத்தை தெளிவாக கூறினார். இவற்றைப் படிப்பதற்கு பல பிறவிகள் எடுக்க வேண்டும். இவற்றைப் புரிந்து கொள்வதற்கு ஞானம் வேண்டும். ஆனால் இவைகளைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஆன்மீகத்தில் எல்கேஜியில் இருக்கும் எக்ஸ் நாடார்கள் ஐயப்பன், முருகன், கிருஷ்ணரைப் பற்றியும் சிலை வணக்கம் பற்றியும் கிண்டல் செய்கிறார்கள். சரியை, கிரியை, யோகம், ஞானம், அத்வைதம், துவைதம், மூலாதாரம், சுழுமுனை, குண்டலினி, போன்றவற்றைப் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். எனவே அவர்களின் கிண்டல்களுக்கு பதில் கொடுக்காமல் அவர்களின் சமய  நூலான    பைபிளில் இருந்து கேள்விகள் கேட்பது சிறந்தது.

நமது சாதனைகள்

நம்முடைய முன்னோர்கள் முக்காலம் அறிந்த பெரும் ஞானிகள். புலிப்பாணி, போகர், அகத்தியர், கருவூர் சித்தர் போன்றவர்கள் எழுதிய எளிமையான மூலிகை வைத்திய நூல்கள்தான் இன்றைய சித்தவைத்தியம். பணம் பறிக்கும் பரிசோதனைகள் இல்லாமல் நாடியைப் பார்த்தே நோயை அறிந்து குணப்படுத்துகின்றனர். எந்த நவீன இயந்திர பரிசோதனையினாலும் கண்டுபிடிக்க முடியாத வாத, நோய்களை முழுமையாக குணமாக்கும் அரிய பொக்கிஷம். ஆளைப் பார்க்காமலேயே ஒருவரின் ஜாதகத்தை பார்த்து, ஒன்பது கிரக அமைப்புகளை வைத்து ஒருவரின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால பலன்களை துல்லியமாக கணித்துக் கூறும் ஜோதிடம் மற்றும் கைரேகை சாஸ்திரத்தை நமக்கு அளித்துள்ளனர். வான சாஸ்திரம் அறிந்துள்ளனர். எந்தவித விஞ்ஞான உபகரணமும் இல்லாமல் பஞ்சாங்கம் மூலம் சூரிய சந்திர கிரகணங்கள் எந்ததேதியில் நடைபெறும் என்பதை மிக துல்லியமாக கூறுகின்றனர்.

வர்மக்கலை உடலில் குறிப்பிட்ட புள்ளியைத் தாக்கி எதிரிகளை செயலிழக்க வைப்பதோடு, நோய்களையும் குணமாக்கும். , களரி, சுருள்வாள், சிலம்பம் போன்ற தற்காப்புக்கலைகளில் சிறந்து விளங்கியுள்ளனர். மனதிற்கு அமைதியைத் தரக்கூடிய கர்நாடக இசை, வீணை, மிருதங்கம், யாழ், பறை, உடுக்கை  போன்ற ஏராளமான இசைக்கருவிகளையும் கண்டுபிடித்துள்ளனர். பூஜ்யம் என்ற எண்ணை உலகிற்கு அறிமுகப்படுத்தியது நாம்தான். நடனக் கலையின் நாயகனாக இருப்பவர் சிவபெருமான். பரதநாட்டியக் கலையில் அபிநயம் பிடிக்கும் ஏராளமான முத்திரைகள் உடல் நோய்களையும் குணமாக்குகிறது. சிற்பக்கலையில் ஏராளமான அற்புதங்களைச் (பிள்ளையார்பட்டி, கழுகுமலை, மாமல்லபுரம் பாறைகளைக்குடைந்து ஏற்படுத்திய குடவரைக்கோவில்கள், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இசை எழுப்பும் தூண்கள், அந்தரத்தில் சிவனின் வாள், காஞ்சிபுரம் தேவராஜஸ்வாமி கோவிலில் கல் சங்கிலி, நாமக்கல் கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் சிங்கத்தின் வாயில் பந்து, ஆழ்வார்திருநகரியில் கல் நாதஸ்வரம் விரிவாக தெரிந்து கொள்ள  hவவி:ஃஃpழநவசலiளெவழநெ.inஃ ) செய்துகாட்டியுள்ளனர்.

2000 வருடங்களுக்கு முன் அசோகர் காலத்தில் உருவாக்கப்பட்ட இரும்புத்தூண் இன்றுவரை துருப்பிடிக்காமல் இருக்கிறது. மகாராஷ்ட்ராவில் சிங்கனாபூர் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு கதவு இல்லாமல், பூட்டு பயன்படுத்தாமல் திருடர் பயமின்றி ஷானி என்ற ஈசன் காத்துவருகிறார். சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் இராமர் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பார்க்க முடியும் ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து இராமரைப் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலில் வீரனின் கையில் உள்ள வில்லில் உள்ள துளையில் குண்டுசியை போட்டால் கீழே விழும் வண்ணம் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மல்லிகார்ஜூனர் கோவிலில் இருதூண்கள் தரையில் படாமல் நிற்கின்றன. மூலிகைகளைக் கொண்டே வர்ணங்களை உருவாக்கி அற்புதமான அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை படைத்துள்ளனர்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக