பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

பைபிளில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அபத்தங்கள்



பைபிளில் கொலைகள்
     கர்த்தர் மோசேயை நோக்கி ~மீதியானியரை நெருக்கி வெட்டிபோடுங்கள்” (எண்ணா.25.17) என்றார். கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம் பண்ணி புருஷர்கள் யாவரையும் கொன்று போட்டார்கள். (எண்ணா.31.7) ~கர்த்தர் நாமத்தை நிந்திக்கிறவன் கொலை செய்யப்படவேண்டும்.(லேவி.24.16)  ஓய்வு நாளில் வேலை செய்கிறவன் கொலை செய்யப்படவேண்டும். (யாத்.37.15) பைபிள்.1. நாளாகமம் 21ஆம் அதிகாரம் பாரா 14:. வேறு கடவுளை வணங்கியதற்காக இஸ்ரவேலர்களிலேயே கொள்ளை நோயை கர்த்தர் வரப்பண்ணினார். அதனால் 70000 பேர் மடிந்தார்கள். நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார். அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள். மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று. சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை. (யாத்.12:29-30) தவறு செய்தவர்களை தண்டிக்கலாம். தலைச்சன் குழந்தைகளையும், மிருகங்களின் தலைகுட்டிகளையும் கர்த்தர் ஏன் கொல்ல வேண்டும்?
•    பைபிளில் கர்த்தர்;; நேரடியாக செய்த கொலைகள்:………..3,71,186; (நன்றி: www.evilbible.com
•    கர்த்தர் இஸ்ரவேலர்களை தூண்டி செய்த கொலைகள்….18,62,265; ;

பைபிளில் கொள்ளை
      புருஷர்கள் எல்லோரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, ஸ்திரீகளையும் குழந்தைகளையும் , மிருக ஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு உன் சத்துருக்களின் கொள்ளைப் பொருளை அனுபவிப்பாயாக. (உபா.20.13)  கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காக பங்கிட்டு யுத்தத்திற்கு படையெடுத்து போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள். (எண்ணா.31.27) இது பழைய ஏற்பாட்டில் இனவெறி பிடித்த கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு கொடுத்த உத்தரவு. இந்த உத்தரவின்படி மோசே கூட்டத்தார் ஏராளமான புறஜாதியினரைக் கொன்று கொள்ளையடித்தார்கள்.

பைபிளில் அபத்தங்கள்:
        உலகம் தட்டையானது என்று பைபிள் கூறுகிறது. “இவைகளுக்கு பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு முனைகளையும் பிடித்திருக்கக் கண்டேன். (வெளி.7-1) கோபர்னிகஸ் என்பவர் பூமிதான் சூரியனை சுற்றி வருகிறது. சூரியன் பூமியை சுற்றிவரவில்லை என்ற உண்மையை உலகிற்கு முதன்.முதலில் அறிவித்தபோது, இந்த உண்மை பைபிளுக்கு மாறாக இருந்ததனால் அவரை நாஸ்திகன் என்று தூற்றி,  அவமானப்படுத்தி, சித்ரவதை செய்தார்கள். ஜியார்டானோ புருனோ என்ற விஞ்ஞானி கிபி.1600-களில் பூமி சூரியனை சுற்றி வருகிறது என கூறியதற்காக ரோம் நகரில் சர்ச்சினால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டார். “பூமி  ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள் மேல் அதை ஸ்தாபித்தார்(சங்கீதம்.104-5) பூமி உருண்டை என்னும் அறிவுபூர்வமான ஆக்கரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக்கருத்தை ஏற்றுக்கொண்டால் ஏசுநாதரும்; பைபிளும் பொய்யாகி கிறித்தவ மதம் ஆட்டம் கண்டு செத்தொழிந்து விடுமே என்று எண்ணிய கிறிஸ்தவ பாதிரிகள் அவரை அடித்தே கொன்றார்கள்.

பைபிளில் கற்பழிப்புகள்
     குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷ சம்போகத்தை அறிந்த ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். புருஷ சம்போகத்தை அறியாத ஸ்திரீகளை உங்களுக்காக உயிரோடே வையுங்கள். எண்ணா.31.17.18. கீழ்க்கண்ட வசனங்கள் கற்பழிப்பிற்கு ஆதரவாக கர்த்தர் கூறியவை.நீதிமொழிகள்.21:10-24, எண்ணாகமம் 31:7-18, உபாகமம்.20:10-14, 22:28-29, 22:23-24, 21:10-14, நீதி.5:30, யாத்திராகமம்:21:7-11 செகாரியா 14:12 இவை கருணை உள்ள கர்த்தர் சொல்லக்கூடிய வார்த்தையா?

பைபிளில் வன்முறைக் கட்டளைகள்
1.    விவாகம் பண்ணியபின் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லை என்பது மெய்ப்பட்டால் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள். உபா.22.13
2.    அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறிசொல்கிறவர்களுமாயிருக்கிற புருஷர்களாகிலும் ஸ்திரீகளாகிலும் கொலை செய்யப்படவேண்டும். லேவி.24.27
3.    அவர்களுடைய பலிபீடங்களை இடித்து. அவர்கள் சிலைகளை தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெறித்து, அவர்களின் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி அவைகளின் பேரும் அவ்விடத்தில் இ;ல்லாமல் அழியும்படி செய்யக்கடவர்கள். உபா.12.1-3
4.    கண்ணுக்கு கண், காலுக்கு கால், தழும்புக்கு தழும்பு பலி கொடுக்கப்படவேண்டும். யாத்.21.24
5.    தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன்
அதைக் கட்டி வைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால்,
மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும். யாத்.21:29
       இதுபோன்ற ஏராளமான கொடுர உத்தரவுகளை (உபாகமம்.17:12, லேவி.20:13, லேவி.20:27, யாத்;.21:15, லேவியராகமம்.20:10, லேவி.21:9, உபா.13:13-19, 13:7-12, லேவி.24:10-16 ஏசாயா.14:21, எசேக்கியேல்..9:5-7, யாத்.12:29-30, லேவி.26:21-22, 13:15-18)  கர்த்தர்தான் மோசேயிடம் கூறுகிறார். ஆனால் பாதிரிகள் இந்த கட்டளைகளுக்கும் கர்த்தருக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் நியாயபிரமான காலத்தில் மோசே கூறியது என்று ஏமாற்றுகிறார்கள்.

பைபிளில் அடிமை வியாபாரம்:
        இனவெறி பிடித்த கர்த்தர் அடிமை வியாபாரத்தை ஆதரிக்கிறார். இஸ்ரவேலர்கள் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஆணையிடுகிறார். உதாரணமாக “உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும், அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்  உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு,அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம். அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக் கொள்ளலாம்,; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம், உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது.”  (லேவி.25:44-46) கீழ்க்கண்ட வசனங்களையும் படித்து பாருங்கள் யாத்;.21:2-11, எபூசி.6:5, 1திமோத்.6:1-2, லூக்கா.12:47-48,யாத்.21:20-21

பைபிளில் ஆபாசக்கதைகள்:
1.    யாக்கோபு தன் மனைவி லேயாள், அவள் தங்கை ராகேல் இவர்களின் வேலைக்காரிகள் சில்பாள், பில்காள் ஆகியோருடன் உறவு கொண்டு பிள்ளை பெறுகிறான். (ஆதி.30.4)
2.    யாக்கோபின் மகன் ரூபன் தன் சித்தி பில்காளுடன் உறவு கொள்கிறான். ஆதி.35.22
3.    ஓணான் தன் அண்ணன் மனைவி தாமாருடன் உறவு கொள்கிறான். ஆதி.38.9
4.    யுதா தன் மருமகள் தாமாருடன் உறவு கொள்கிறான். ஆதி.38.18-26
5.    தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளுடன் உறவு கொண்டு உரியாவையும் கொன்று அவளை மனைவியாக்கிக் கொள்கிறான். சாமு.3.27
6.    தாவீதின் மகன் அம்னோன் தாமார் என்னும் தன் சகோதரியைக் கற்பழிக்கிறான். சாமு.13.14
7.    லோத் என்பவருடைய இருமகள்களும் அவருக்கு மதுவைக் கொடு;த்து அவருடன் உறவு கொண்டு பிள்ளை பெறுகிறார்கள். ஆதி.19.33
     இது போன்ற ஏராளமான ஆபாசக்கதைகள் கொண்ட பைபிளை புனிதநூல் என்கிறார்கள். ஆனால் ஒரு பத்தினி பெண்ணின் கதைகூட பைபிளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேட்டால் அது வரலாறு என்கிறார்கள்.

பைபிளை பலமுறை திருத்தம் செய்தும் அதை தயாரித்த மூடர்களுக்கு அதிலுள்ள தவறானவற்றை நீக்க வேண்டும் என்ற அறிவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக