பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

சிறுபான்மை சலுகை தேவையா?


திங்கள், 26 மார்ச், 2012  

தமிழக பட்ஜெட்டில் ஜெயலலிதா சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை 55 கோடியும், உலமாக்களுக்கு ஒரு கோடியும், ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளார். இது தேசநலனில் அக்கறை இல்லாமல் ஓட்டுக்காக செய்யப்படும் இமாலயத் தவறு. இந்துக்களை மதம் மாற்றுவதற்காக அரபு நாடுகளில் இருந்தும், கிறிஸ்தவ நாடுகளில் இருந்தும் வரும் கோடிக்கணக்கான நிதி வந்து கொண்டிருக்கும் போது அரசாங்கமே மதமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.  

மதச்சார்பற்ற நாட்டில் மத, ஜாதி ஒதுக்கீடு செய்வதே தவறான செயல். மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டுமே தவிர அரசே அவர்களை பிரித்து வைக்கும் செயலை செய்யக்கூடாது. முதலில் சாதிச்சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி விட்டு, அனைத்து மக்களுக்கும் குடும்ப பொருளாதார அடிப்படையை வைத்தே சலுகைகள் வழங்க வேண்டும். வறுமையில் இருப்பவர்களுக்கு சலுகை கொடுக்கலாம். வசதியாக இருப்பவனுக்கு ஏன் சலுகை கொடுக்க வேண்டும்? கிறிஸ்தவன் ஜெருசலேம் போனால் என்ன? போகாவிட்டால் என்ன? கிறிஸ்தவர்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களா ஜெருசலேம் செல்லப் போகிறார்கள். ஓரளவு வசதி உள்ளவர்கள்தான் செல்வார்கள். அவர்களுக்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும். கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் கோடிகளில் ஜெயலலிதாவின் ஒரு கோடி அற்ப பணம்.  

சிறுபான்மை சலுகையை ஆரம்பித்து வைத்தது வெள்ளையன் ஆட்சியில்தான். கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்களுக்கு நிலம், அரசு வேலை, சர் பட்டம், செவாலியர் பட்டம் , பள்ளிகள் துவங்க சலுகைகள் என்று பல விதங்களில் ஆசைகாட்டினான். அதற்கு ஆசைப்படாமல் மதம் மாறாமல் வாழ்ந்து வருபவர்கள்தான் இன்றைய இந்துக்கள். வெள்ளையன் விட்டுச்சென்ற சில சட்டங்களை நம் அரசாங்கம் முட்டாள்தனமாக இன்னும் தொடர்வது நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் செயல் அல்ல.  

இந்து விழாக்களுக்கு சிறப்பு பேருந்து என்ற பெயாில் அரசே அதிக டிக்கெட் கட்டணம் வசுலிக்கிறது. கோவில்களில் விழாக்களுக்கு சிறப்புதரிசனம் என்று வசுல் கொடிகட்டி பறக்கிறது. இவ்வாறு நம்மிடம் பணத்தைக் கொள்ளையடித்து கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் திமுக அதிமுக இரண்டுமே வாாி வழங்கி வருகின்றன.

இந்துக்களின் வரிப்பணத்தில் இருந்துஅண்டை வீட்டு நெய்யே, என் அண்ணன் பெண்டாட்டி கையேஎன்று சிறுபான்மையினருக்கு செலவழிக்கிறது. ஏற்கனவே சிறுபான்மையினரை கருணாநிதி சிறப்பாக தாஜா செய்தார். இப்போது ஜெயலலிதா தொடர்கிறார். உலமா பென்சன் பெறும் உலமாக்களும், ஹஜ் யாத்திரை செல்பவர்களும் ஜெருசலேம் போகிறவர்களும் நாட்டுக்கு சேவை செய்யவா போகிறார்கள்? இவர்களுக்கு ஏன் நம் வரிப்பணத்தை வாரிவழங்க வேண்டும். சர்ச், மசுதி வருமானத்தை எடுக்க முடியாத கையாலாகாத அரசு கோவில் வருமானத்தை எடுத்து தேசதுரோக சக்திகளுக்கு வழங்குவது நாட்டுக்கு நல்லதல்ல. காசி யாத்திரை, நர்மதா யாத்திரை என பல யாத்திரைகளில் கையில் காசே இல்லாமல் கிடைத்ததை உண்டு, ஆங்காங்கே திண்ணைகளில் தங்கி யாத்திரை செல்கிறார்கள். அவர்களுக்கு எந்த சலுகையும் செய்ய அரசு தயாராகஇல்லை.

எனவே இந்துக்களே ஒன்றுபடுங்கள். இந்துநலன் காப்பவருக்கு ஓட்டுபோடுங்கள். அரசே மைனாரிட்டி சலுகையை நிறுத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக