பின்பற்றுபவர்கள்

புதன், 2 ஜனவரி, 2019

தாய்மதம் திரும்பியோர்கள்

கிறிஸ்தவர்கள் எவனாவது ஒரு முட்டாள் மதம்மாறிட்டான்னா அவனை மேடையில நிறுத்தி சாட்சி சொல்ல வச்சு மதம்பரப்பரானுங்க. ஆனால்ஏராளமான கிறிஸ்தவர்கள் இந்துவாகி வருகிறார்கள். வெளிநாட்டில் இந்து மதம் வேகமாக பரவி வருகிறது. நாம் அவர்களை என் மதத்துக்கு வா என்று பால்பவுடர், கோதுமை கொடுக்கவில்லை. உண்மையான ஆன்மீகம் இங்குதான் இருக்கிறது என்று பலர் ஹிந்து மதத்தை தழுவுகின்றனா்.

தமிழ்நாட்டிலும் இந்துவாக இருந்து கிறிஸ்தவனாக மாறி மீண்டும் இந்து மதத்திற்கே திரும்பியவர்கள் பலர் உள்ளனா். அவர்களைப் பற்றி எந்த செய்தியும் கூட்டங்களிலோ, மீடியாக்களிலோ வருவதில்லை. இதுபோல் தாய்மதம் திரும்பி வந்தவர்களைப் பற்றி நீங்கள் அறிந்ததை பகிர்ந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட சம்பவங்களில் சிலவற்றை கீழே காணலாம்.

                       திருமணத்திற்காக தாய்மதம் திரும்பியவர்
மஞ்சுளா என்று ஒரு பெண்மணி. அவரது கணவர் அரசு ஊழியராக இருந்தார். ஒரு விபத்தில் கணவர் இறந்துவிட அல்லேலூயா கோஷ்டி அவரிடம் ஏசப்பன கும்பிட்டுருந்தா சாகவிட்டுருக்க மாட்டாரு. உங்க தெய்வம் கைவிட்டுட்டு. எங்க குடும்பத்துல 200 வருசம் சாகாம இருக்கோம்னு கதை விட்டு மதம் மாத்திட்டுது. இவரும் பைபிள் வசனம் இஸ்ரவேலர்களுக்கு சொன்னதுன்னு தெரியாம இஸ்ரவேலர்களை காத்த தேவன் நம்மையும் காப்பாரு. ....ப்பாருன்னு பைபிள தூக்கிகிட்டு அலைஞ்சாங்க . கருணை அடிப்படையில அரசு வேலை கிடைச்சுது. வீட்டுல விளக்கேத்தாம, குலதெய்வத்தை கும்பிடாம ஏசப்பன்தான் சகலமும்னு வீடு முழுக்க கருத்தரும் ஏசுவும் இஸ்ரவேலர்களுக்கு சொன்ன வசனங்களை ஒட்டி வச்சுகிட்டு மகனையும் கிறிஸ்தவனாகவே வளர்த்து புல்லரிச்சாங்க.
பையன் படிச்சு முடிச்சு வேலைக்கும் போய்ட்டான். பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க. இவங்க பிள்ளை மார். இந்து போ்லயே இருந்ததால இந்துன்னு நினைச்சு சம்பந்தம் பண்ண வந்தவங்க. எல்லாம் பைபிள் வசனத்தை பாத்தவுடன் நீங்க கிறிஸ்தவங்களா. தெரிஞ்சிருந்தா வந்திருக்கவேமாட்டோமேன்னு பின்னங்கால் பிடாில பட ஓடிட்டாங்க. கிறிஸ்தவ மதத்துல பிள்ளைமார்ல பொண்ணே கிடைக்கல. மகனுக்கு இந்து நண்பர்கள் உண்டு. இவன் வெறுத்துப்போய் அம்மாவிடம் சண்டை போட ஆரம்பித்துவிட்டான். முதல்ல இந்த டுபாக்கூர் பைபிள் வசனத்தை ஏசப்பன் படத்தை எல்லாம் தூக்கி வெளியே வீசு. அது இருக்கற வரை எனக்கு கல்யாணம் ஆகாது.அப்படின்னு சண்டை போட கடைசில ஏசப்பாவை நம்பினா நாசமாதான் போவோம்னு உணர்ந்து இந்துவாகிட்டாங்க. அதன்பிறகு அந்த பையனுக்கு கல்யாணம் (இந்து குடும்பத்தில்தான்) ஆகி திருநெல்வேலில இப்போ ஒரு பேரன் பேத்தியோட சந்தோஷமாக இருக்காங்க.
இந்த நிலைமை கிறிஸ்தவத்துக்கு மாறினவர்களுக்கு வர வைக்கணும்.இந்து சொந்தங்களே விழித்தெழுங்கள்.

காலேப்தங்கராஜ்
இவர் தையல் தொழில் செய்பவர். நாடார். கிறிஸ்தவஊழியங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்தார். பேரூரணியில் அரசமரத்தடியில் இருந்த நாகர் சிலைகளை ஊழியம் செய்துவிட்டு வரும்போது இந்த கல்லை வணங்குகிறார்களே என்று உடைத்து ஊழியம் செய்தவர். 1996ல் இவருடைய நண்பருக்காக ஜோதிடம் பார்க்க சென்றபோது இவருடைய ஜாதகத்தையும் எடுத்துசென்றார். அப்போது ஜாதகம் பார்ப்பதற்கு 5ரூபாய்.தான். இவருடைய நண்பருக்கு ஜாதகம் பார்த்தபின் இவருடைய ஜாதகத்தை நீட்டினார். ஜோதிடர் நீங்கள் கலைத்தொழில் செய்கிறீர்களா என்று கேட்டபோது வேண்டுமென்றே நான் லாரி டிரைவர். இது கலைத்தொழிலா என்றார். அவருடைய கேள்விகளுக்கு இடக்குமடக்காக பதில் கூறினார். பேச்சுவாக்கில் காஜா போட்டுகொண்டிருந்த சமயத்தில் என்று ஏதோ சொல்லிவிட்டார். ஜோதிடர் அப்படியானால் நீங்கள் தையல் தொழில் செய்கிறீர்களா என கேட்க ஒத்துக்கொண்டு விளையாட்டாக அப்படி கூறினேன் என்றார்.
             ஜோதிடம் விளையாட்டல்ல. அது ஒரு அறிவியல். இப்போது நான் உங்களுக்கு கூறுவதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 1998 வரை உங்களுக்கு கிரகங்கள் சாதகமாக உள்ளன. நன்றாக இருப்பீர்கள். அதன் பிறகு கிரகங்கள் பாதகமாக மாறுகின்றன. உங்கள் வாழ்க்கையில் சம்பாதித்ததை எல்லாம் இழப்பீர்கள். ஒரு பீடிக்கு கூட கையேந்துகிற நிலை வந்துவிடும். தற்கொலைசெய்து கொள்ளலாமா என நினைப்பீர்கள். நான் சொன்னபடி நடக்காவிட்டால் நான் இந்த தொழிலையே விட்டுவிடுகிறேன். நான் உங்களுக்கு நட்புக்காக இலவசமாக சொன்னதாக இருக்கட்டும். என்று கூறினார்.
                 அவர் கூறியபடி 1998ல் தூத்துக்குடியில் நாடார்களுக்கும் பரவர்களுக்கும் நடந்த கலவரத்தில் கடைதிறக்க முடியாமல் 10 நாட்கள் மூடிவிட்டார். கடையை வேறு ஏரியாவிற்கு மாற்றினார். அங்கு தொடர்ந்து தொழிலில் பின்னடைவு. வீடு, நகை, எல்லாவற்றையும் விற்றார். தொழிலை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் அத்தனையும் வீணானது. 
               தொழிலுக்காக புதியம்புத்தூருக்கு குடும்பத்துடன் சென்றவர் தற்கொலைசெய்யும் முடிவெடுத்து அங்கிருந்து வரும்போது  ... மீதியை பின்னர் தெரிவிக்கிறேன்.
தொடரும். 

1 கருத்து:

  1. *தாய் மதத்தைவிட்டு வெளியேறுவது பெற்ற தாயை கைவிடுவதற்கு சமம்* என்று பலர் தத்துவம் பேசுகிறார்கள்.
    நான் கேட்கிறேன்: என்னைப் பெற்ற தாய் என்னைப் பார்த்து, *_"உன் அண்ணன் உன்னைவிட உயர்ந்த ஜாதி, உன் தம்பி உன்னைவிட கீழ்ஜாதி"_* என்று சொல்வாரா? *_"உன் தம்பி கல்வி கற்கக்கூடாது; மீறினால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று; கற்றதை ஓதினால் அவன் நாக்கை வெட்டு (மனுநூல் 12:4); அவன் உன்னோடு சம ஆசனத்தில் அமரக்கூடாது; அமர்ந்தால் ஊரைவிட்டு துரத்து" (மனுநூல் 8:281)_* என்று பாகுபாடு கற்பித்தால், *"அவர் உண்மையான தாயா இல்லையா?"* என்று எனக்கு சந்தேகம் வராதா? தத்தெடுத்த தாய்கூட இப்படி கொடுமைப்படுத்தமுடியாதே! இது நம் எல்லாருடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும்போது, *களங்கமில்லாத அன்புக்கு சொந்தமான தாயை இந்த மிருகத்தனமான மதத்துக்கு எப்படி இணையாக்குகிறீர்கள்?* சக மனிதனிடம் காட்டவேண்டிய அடிப்படை நீதியே இல்லாத கொடிய மதத்தை என் *’தாய்மதம்’* என்று எப்படி சொல்லமுடியும்? இந்துத்துவம் தாய் போன்ற ஒரு மதமானால் அது இப்படி கொடுமைப்படுத்துமா?
    உங்களை *’கீழ்சாதி’, ’தீண்டத்தகாதவன், ‘சண்டாளன்’* என்று ஒரு மதம் இழிவுபடுத்தி, கொடுமைப்படுத்தி, கொலைகூட செய்யுமானால், அந்த கொடிய மதத்தை இயக்கிக்கொண்டிருக்கும் தீய சக்திகளை நீங்கள் *சாத்தான்* என்று சொல்லாமல் *பரமாத்மா* என்றா சொல்வீர்கள்?
    ஒரு கொள்கை உங்களுக்கே படுபாதகம் இழைக்கும் *சமூகவிரோத கொள்கை* என்று தெரிந்தபின்பும் அதில் நீங்கள் தொடர்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது அல்லவா! உங்களை *வேறொரு மதம்* இழிவுபடுத்தினால்கூட அதை சகித்துக்கொள்ளலாம். ஆனால், *உங்கள் மதமே* உங்களை இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தும்போது அந்த மதத்தில் *சுயமரியாதையோடு* எப்படி தொடர்கிறீர்கள்?
    இந்து மதத்தின் எல்லா ‘புனித’ புத்தகங்களையும் நீங்கள் மனப்பாடமாக கற்றாலும் பரமாத்மாவுக்கு அர்ச்சக பணி செய்யும் உரிமை உங்களுக்கு இல்லை என்னும் மகாஇழிவை சகித்துக்கொண்டு இந்துவாக எப்படி தொடர்கிறீர்கள்? இந்த அநியாயமான சமுதாய ஏற்றத்தாழ்வு கொள்கையை அனைவருக்கும் பொதுவான *நிஜமான* சர்வேஷ்வரன் கற்பித்திருக்கமுடியுமா?

    நாய்களையும், பூனைகளையும்விட மோசமாக இந்த நாட்டின் குடிமக்களாகிய நாங்கள் இழிவுபடுத்தப்பட்டு, குடிப்பதற்குத் தண்ணீர் கூடக் கிடைக்காமல் வாழ்கிறோம். இந்த கேவலமான நிலையில், இந்த நாட்டை என் *’சொந்தத் தாயகம்’* என்றும், இந்து மதத்தை என் *’சொந்த மதம்’* என்றும் எப்படி நான் கூறமுடியும்? சுயமரியாதையுள்ள தலித் எவனும் இந்த நாட்டைக் குறித்து பெருமைகொள்ள முடியாது. இந்த நாடு எங்களுக்கு இழைத்துவரும் கொடுமைகள் எண்ணில் அடங்காதவை, எனவே நான் இந்திய நாட்டைச் சார்ந்தவன் என்பதில் வெட்கப்படுகிறேன்"_ என்று வேதனையோடு சொன்னார்.
    *இந்து என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!* என்று டயலாக் பேசுகிறார்களே! இது உங்களுக்கு அநியாயமாக தெரியவில்லையா? உங்களை *’தீண்டத்தகாதவன்’* என்று ஒடுக்கும் சமூகத்தில் உங்களுக்கு என்ன தலைநிமிர்வு இருக்கிறது? நீங்கள் எவ்வளவுதான் "ஜெய் ஸ்ரீராம்" என்று கத்தினாலும் *"ஏ நானும் ரெளடிதான்!"* என்று வடிவேலு கத்துவதுபோலத்தான் இருக்கிறது.
    இந்துத்துவத்தைவிட்டு தலித் ஒருவர் வெளியேறும் போது ஆதிக்கசாதி இந்துக்கள் கொதித்து எழுவது *சகோதரன் பிரிந்து சென்றுவிட்டானே என்ற வருத்தத்தால் அல்ல; ஒரு அடிமை. தப்பித்துவிட்டானே என்னும் ஆதங்கத்தால்தான்* என்பதை தயவுசெய்து உணருங்கள்.

    பதிலளிநீக்கு