பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

கிறிஸ்தவ ஏமாற்று விளம்பரங்கள்

துக்கம் சந்தோஷமாக மாறுமா?

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று யூதர்களுக்கு சொன்ன வசனத்தை இந்திய மக்களுக்கு சொன்னது போல் சுவர் விளம்பரம் செய்கிறாா்கள். இந்த விளம்பரமும் உண்மையை மறைக்கிறது. உங்கள் சந்தோஷம் துக்கமாக மாறாது என்பதற்கு பைபிளில் உத்தரவாதம் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. நம் பாவங்கள் தீரும் வரை துன்பத்தையும், புண்ணியங்கள் தீரும் வரை சந்தோஷத்தையும் அனுபவித்துக் கழிக்கிறோம். இன்பத்தை அனுபவித்தால் துன்பத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும். கடமையைப் பற்று இல்லாமல் செய்யும்போது கர்மங்களால் பாவமோ புண்ணியமோ ஏற்படுவதில்லை. இறைவன் நம் வினைகளுக்கேற்ப கிரகசாரங்களின்படி அவ்வப்போது இரண்டையும் மாற்றி மாற்றி கொடுக்கிறார். இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் வருந்தாமலும் இரண்டையும் சமமாகப் பாவி;ப்பவர்கள் ஞானியாகிறார்கள். துக்கம் சந்தோஷம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது. கிறிஸ்தவர்கள் மட்டும் சந்தோஷமாக வாழ்கிறாா்களா?  கிறிஸ்தவா்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறாா்களா? இல்லை. கடல் அலைபோல் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். பெரும் புண்ணியவான்கள் மட்டுமே நோய்நொடியின்றி சந்தோஷமாக வாழ்கின்றனா்.

கர்த்தரை நம்பினால் கைவிடப்படமாட்டார்களா?
கர்த்தரை நம்பினோர் கைவிடப்படார் என்று விளம்பரம் செய்கிறார்கள். இந்த வசனம் பொய் என்பது  “கர்த்தரே என்னை ஏன் கைவிட்டீர்” என்று ஏசு கதறி அழுததிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. மேலும் ஏராளமான பாதிரிகள் கொலைசெய்யப்பட்டு இறந்துள்ளனர். அபிராமிபட்டர், மார்க்கண்டேயன், பட்டினத்தார், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற மகான்களின் வரலாற்றின் மூலம் நம் தெய்வங்களின் சக்தியைத் தெரிந்து கொள்ளலாம். சாகும் நிலையில் சாமித்தோப்பு ஐயா வைகுண்டர் கோவிலில் கிடத்தப்பட்டு கோவில் தீர்த்தத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு இன்று ஐயா வைகுண்டரின் புகழ்பாடி வரும் திரு.சிவசந்திரன் அவர்கள் நம் தெய்வங்களின் சக்திக்கு கண்கண்ட சாட்சியாக இருக்கிறார். சுனாமியின்போது திருச்செந்தூர், குலசேகரபட்டினம், உவரி, கன்யாகுமரி போன்ற கடற்கரை கோயில்களுக்கோ பக்தர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வேளாங்கண்ணி, கல்பாக்கம் போன்ற இடங்களில் சர்ச்சில் ஜெபம் செய்து கொண்டிருந்தவர்கள் உட்பட 10000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

உனக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களால் கொல்லப்பட்ட, கொல்லப்படுகின்ற கிறிஸ்தவா்கள் ஏராளம். இந்த வசனம் உண்மையாக இருந்தால் எந்த கிறிஸ்தவரும் யாராலும் கொலை செய்யபட்டிருக்க முடியாது. ஆனால் கொலை செய்யப்பட்ட பாதிரிகளை ரத்த சாட்சியாய் மரித்தார் என்று ஏசுவின் கையாலாகத்தன்மையை மறைக்க முயல்கின்றனா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக