பின்பற்றுபவர்கள்

சனி, 24 ஆகஸ்ட், 2019

பைபிளில் கொலைகார கட்டளைகள்

கருத்தர் கொலை செய்யாதிருப்பாயாகன்னு ஒரு சில இடங்கள்லதான் சொல்றார. ஆனால் கொலை பண்ணச் சொல்கிற வசனங்கள். ஏராளமாக இருக்கின்றன. அதில் திரும்ப திரும்ப வருபவற்றை விட்டுவிட்டு மீதியை பட்டியலிடப்பட்டுள்ளது. மக்கள் எதை பின்பற்றுவாங்க.
இதுல எந்த கொலை எல்லாம் நியாயமானது? எவை எல்லாம் அநியாயமானதுன்னு கிறிஸ்தவர்கள்தான் ஆராய்ந்து பார்க்க  வேண்டும். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அவர் என்ன செஞ்சிருந்தாலும் சரிதான்னு புல்லரிப்பாங்க. அவங்க மைன்ட் செட் அப்படி.
யாத்.21.12.ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக் கடவன்.
15.தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன்.
16 ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும் இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
17 தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன்.
23 வேறே சேதமுண்டானால் ஜீவனுக்கு ஜீவன்
24 கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் கைக்குக் கை காலுக்குக் கால்
28 ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால் அந்த மாடு கல்லெறியப்படவேண்டும் அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது.
யாத்.22.18 சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.
19 மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
20 கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
யாத்.23.15 ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
லேவி.20. 2 எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால் அவன் கொலைசெய்யப்பட வேண்டும்
10 ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால் பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
11 தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால் இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள் அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
12 ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால் இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்
13 ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணினால் அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக் கடவர்கள்
14 ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் அடைந்;தால்; அது முறைகேடு அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
15 ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால் அவன் கொலைசெய்யப்படக்கடவன் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.
16 ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால் அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய் இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்;
27 அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்பட வேண்டும்
லேவி.24. 16 கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்
எண்.3. 10 ஆரோனையும் அவன் குமாரரை தவிர ஆசாரிய ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன்
உபா.13. 5 தீர்க்கதரிசியும்> அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்
9 வேறு தேவர்களை சேவிப்போம் வாருங்கள் என ஒருவன் ஏவினால் அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்
உபா.24. 7 இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனைத் திருடி ஆதாயந்தேடி அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால் அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்
யோசுவா.1. 18 நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சொல்லைக் கேளாமல் உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம் பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.
இவரைதான் பத்சேபாளை ரேப் பண்ணின தாவீது நல்லவர்னு ருசிச்சு பாக்க சொன்னான்னு சுவர்ல கருத்தர் நல்லவர்னு எழுதி போட்டு மக்களை ஏமாத்தறது சரியா? பாஸ்டர்கள், பிஷப்புகள், ஊழியர்கள் யாராவது பதில் சொல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக