பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கணபதி மந்திரங்கள்


27 ஆகஸ்ட், 2012  

தெய்வங்களில் விநாயகர் வித்தியாசமானவர். மிகவும் எளிமையானவர். அவரை வணங்க அருகம்புல்போதும். மஞ்சள், களிமண், பசுஞ்சாணம் எதில் வேண்டுமானாலும் பிடித்து வழிபடலாம். அவருக்கு மாடமாளிகை, கோபுரம் எதுவும் தேவையில்லை. ஆத்தங்கரை ஓரம், அரசமரத்தடி எங்கு வேண்டுமானாலும் இருந்து அருள்பாலிப்பார். பசுஞ்சாணத்தில் அவரை பிடித்து ஒரு அருகம்புல் குத்தி தூப, தீபம் காட்டி வழிபட்டபின் அந்த சாணப்பிள்ளையாரை கரையான் புற்றில் வைத்தாலும் சரி, வேறு புழு பூச்சிகள், வண்டுகள் இருக்கும் இடங்களில் வைத்தாலும் சரி அவை சாணப்பிள்ளையாரை தீண்டுவதில்லை.  

பிள்ளையாரை வழிபடாமல் எந்த செயலை செய்தாலும் அவை தடைபட்டுப் போகும். அதனால்தான் பிள்ளையார் சுழி போட்டு எதையும் தொடங்க வேண்டும் என்பர். விக்னங்களை (தடைகளை) போக்குவதால் விக்ன விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். அவருக்குரிய மந்திரங்கள் பல உள்ளன

 கீழ்க்கண்ட மந்திரங்களை ஜபித்து பலன் அடையுங்கள். கணேச பஞ்சரத்னம். கணபதி மேல் ஐந்து ரத்தினம் போன்ற பாடல்கள். இவை பாடுவதற்கும், கேட்பதற்கும் மிக இனிமையானது. குழந்தைகளை நல்லவர்களாக வல்லவர்களாக உருவாக்கும்.  
கணேச பஞ்சரத்னம்  
முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்  
கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்  
அனாயகைக நாயகம் வினாசிதேப தைத்யகம்  
நதாசுபாசு நாசகம் நமாமி தம் வினாயகம் 

 நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம் 

 நமத்ஸூராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம்  
ஸூரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்  
மகேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்  

ஸமஸ்தலோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம் 
 தரேதரோதரம்வரம் வரேப வக்த்ர மக்ஷரம் 
 க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்  
நமஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்  

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்கி பாஜநம்  
புராரி புர்வநந்தனம் ஸூராரிகர்வ சர்வநம் 
 ப்ரபஞ்சநாஷபீஷனம் தனஞ்சயாதி புஷனம்  
கபோலதான வாரணம் பஜேபுரான வாரனம் 

 நிதாந்த காந்தி தந்தகாந்த மந்த காந்த காத்மஜம்  
அசிந்த்ய ரூப மந்தஹீன மந்தராய ஹ்ருந்தநம் 
 ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்  
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி சந்ததம் 

 மஹாகணேச பஞ்சரத்ன மாதரேண யோந்வஹம்  
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிச்மரண் கணேச்வரம்  
அரோகதா மதோஷதாம் ஸூஸாஹிதீம் ஸூபுத்ரதாம்  
ஸமாஹிதாயு ரஷ்டபுதி மப்யுபைதி ஸோசிராத் 

 சோடச கணபதி மந்திரம்
1) ஓம் ஸூமுகாய நமஹ 2) ஓம் ஏகதந்தாய நமஹ 3) ஓம் கபிலாய நமஹ 4) ஓம் கஜகர்ணகாய நமஹ 5) ஓம் லம்போதராய நமஹ 6) ஓம் விகடாய நமஹ 7) ஓம் விக்னராஜாய நமஹ 8) ஓம் தூம்ரகேதுவே நமஹ 9) ஓம் கணாத்யக்ஷாய நமஹ 10 ஓம் பால சந்த்ராய நமஹ 11 ஓம் கஜானனாய நமஹ 12 ஓம் வக்ரதுண்டாய நமஹ 13 ஓம் சுர்ப்பகர்ணாய நமஹ 14 ஓம் ஹேரம்பாய நமஹ 15 ஓம் ஸ்கந்த புர்வஜாய நமஹ 16 ஓம் ஸ்ரீமஹாகணபதியே நமஹ  

கணபதி காயத்ரி  
ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தந்நோதந்திப் பிரசோதயாத் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத ஸர்வஜனமே வசமானய ஸ்வாஹா (ஹோமங்களின் போது கூறுவது) ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே ஓம் கஜானனம் புத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பு பலஸார பக்ஷிதம் உமாசுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாதபங்கஜம் (எந்த செயலையும் செய்ய ஆரம்பிக்குமுன் கூற வேண்டும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக