பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 மே, 2021

மதம் மாறியோா்களே சிந்தியுங்கள்

        ஆபிரகாமிய மதங்களைப் பின்பற்றும் பாரதத்தின் தவப்புதல்வர்களே ஃபுதல்விகளே. நீங்கள் சில தலைமுறைகளுக்கு முன்பு வரை இந்துக்களாக வாழ்ந்தவர்கள்தான். உங்கள் உடலில் ஓடிக்கொண்டிருப்பது இந்து ரத்தம்தான். உங்களில் எவரும் இந்து மத நூல்களில் உள்ள தத்துவங்களை விட தற்போது நீங்கள் பின்பற்றும் மதத்தின் நூல்களில் உள்ள தத்துவங்கள் மேலானவை என்று ஒப்பிட்டு பார்த்து அந்த மதத்தை பின்பற்றவில்லை. ஏதோ சில அற்ப காரணங்களுக்காக வாளுக்கு பயந்தோ பொருளுக்கு ஆசைப்பட்டோ ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் கூறும் அதே காரணங்களுக்காக இன்றுவரை மதம் மாறாமல் தன் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி வருபவர்கள்தான் இந்துக்கள்.

     இந்த பூமி ஆன்மீக பூமி. இங்கு பணத்தையும் பதவியையும் புகழையும் உதறிவிட்டு இறைவனை நோக்கி தவமிருந்த  பட்டினத்தார், பத்திரகிரியார், புத்தர், இளங்கோவடிகள், ராமகிருஷ்ணபரமஹம்சர், விவேகானந்தர், ரமணர்,  சித்தர்கள் ரிஷிகள் தவசீலர்கள் ஏராளம். அரசர்களையும் பணம் படைத்தவர்களையும் விட துறவிகளை மட்டுமே மதிக்கின்ற உயா்ந்த கலாசாரம் கொண்ட மண் இது.  அவர்கள் எழுதிய நூல்கள் ஏராளம். அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கல்வெட்டுகளாக, சிற்பங்களாக, நூல்களாக இங்கு ஏராளமாக கொட்டி கிடக்கிறது. தமிழ் மண்ணில் பிறந்து உண்டு வளர்ந்து வரும் நீங்கள் நம் முன்னோர்களின் வரலாற்றையும் செய்த அற்புதங்களையும் உயர்ந்த வாழ்க்கை முறையையும் நம்பாமல் ஏதோ ஒரு நாட்டில் யார் யாரோ எழுதி தொகுத்த நூல்களையும் அவர்களின் வரலாற்றையும் கதைகளையும் எப்படி நம்புகிறீர்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.

     ஆபிரகாமிய மதங்களை பின்பற்றும் நீங்கள் அம்மதங்கள் தோன்றிய நாடுகளில் உள்ளபடி அம்மதங்களை ஏன் பின்பற்றுவதில்லை. அந்த நாடுகளில் திருமணம் செய்ய எவரும் தாலி கட்டிக்கொள்வதில்லை. இங்கு இந்துக்களின் முறையைப்பின்பற்றி தாலி கட்டுகிறீர்கள். அம்மத வழக்கப்படி ஜோதிடம், நல்ல நேரம் பார்க்கக்கூடாது. ஆனால் நீங்கள் அதை செய்கிறீர்கள். இந்துக்களின் முறைப்படிதான் வீடு கட்டுவதற்கு பூமிபூஜை போடுகிறீர்கள். வாஸ்து பார்க்கிறீர்கள். தச்சு கழித்து கிரகபிரவேசம் செய்கிறீர்கள்.  இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு இந்து மதத்தை குறைகூறுகிறீர்கள். எதற்கு இப்படி போலியான வாழ்க்கை வாழ வேண்டும்?

     ஆபிரகாமிய மதங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. கண்ணுக்கு கண் திருடினால் கையைவெட்டு காலை வெட்டு என கொடுர தண்டனைகள் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகரீகத்தின் உச்சகட்டத்தில் பிரமாண்டமான அற்புதங்கள் நிறைந்த கோவில்களையும் வழிபாட்டு முறைகளையும் இந்து மதம் கொண்டுள்ளது. அந்த மதங்கள் நம் கலாசாரம் பண்பாட்டுக்கு ஏற்றவை அல்ல. வழிபாட்டில் முழு சுதந்திரம் கொடுக்கும் ஒரேமதம் இந்து மதம்தான். இப்படிதான் செய்ய வேண்டும் என எவரையும் கட்டாயபடுத்துவதில்லை. பல்வேறு வழிமுறைகளை சொல்லிகொடுத்துவிட்டு தோ்ந்தெடுக்கும் முடிவை அவரவரிடம் விட்டுவிடுகிறது.

     இந்து மதம் அறிவியல் பூர்வமானது. பல ஆண்டுகள் கழித்து எந்த தேதியில் எத்தனை மணிக்கு எத்தனை வினாடியில் வரும் என்பதைக்கூட துல்லியமாக பஞ்சாங்கத்தை வைத்தே குறிப்பிடுகிறது.  இந்த ஆண்டு பிறை என்றைக்கு தெரியும் என குழம்புவதில்லை. பூமி தட்டையானது என கூறி உருண்டை என நிரூபித்தவர்களை கொல்லவில்லை. ஆபிரகாமிய மதங்கள் இரண்டுமே ஆதாம் ஏவாள் கட்டுக்கதைகளை நம்புகின்றன. அந்த கதைக்கு ஆதாரம் எதுவும் கிடையாது. முக்காலம் உணர்ந்த ஞானிகளால் எழுதப்படவில்லை. காற்று புகாத பைகளில் தானியங்களை சில மாதங்கள் வைத்திருந்தால் அந்த தானியங்களில் புழுக்கள் வண்டுகள் உருவாவதை போல் இறைவன் தன் விருப்பத்தின்படி உயிர்களை ஒடுங்கவும் வெளிக்கொணரவும் செய்கிறான். அதுவே லிங்க தத்துவம். தலையில் குட்டுவது தோப்புகரணம் போடுவது ஹோமம் வளர்ப்பது போன்ற வழிபாட்டுமுறைகளும், பிறப்பு முதல் இறப்புவரை பின்பற்றப்படும் சடங்குகள் சம்பிரதாயங்களும் கண் விழித்து கோலம் போடுவது  முதல் எந்த திசையில் படுக்க வேண்டும் என்பது வரை செயல்களை எப்படி செய்ய வேண்டும் என அறிவியல் பூர்வமாக மனித குலத்தின் நன்மைக்காக கூறியுள்ளது. எனவேதான் Albuquerque,NM, Kirtland Fedaral Credit Union செக்கில்“ HINDUISM IS MOST SCIENTIFIC ” என கொட்டெழுத்தில் அச்சிட்டுள்ளனா்.  

     நீங்கள் என்று மதம் மாறினீர்களோ அன்று உங்களிடம் இருந்த  சகிப்புத்தன்மையும் நல்ல குணங்களும் மறைந்து விட்டது. பரந்த மனப்பான்மை பறந்துவிட்டது. உங்கள் கடவுள் மட்டும்தான் உண்மை மற்ற தெய்வங்கள் சாத்தான்கள் என நினைக்கிறீர்கள். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். அவன் இல்லாத இடமில்லை என்ற தத்துவத்தை மறந்து இந்துக்கள் கல்லை வழிபடுவதாக நினைக்கிறீர்கள். மனிதர்களை மட்டுமல்லாது எல்லா உயிர்களையும் இறைவனின் வடிவமாக பார்க்க கற்றுக்கொடுக்கிறது இந்து மதம். அதனால் எல்லா தெய்வங்களுக்கும் ஒரு பிராணியை வாகனமாக வைத்து வழிபடுகின்றனர்.

         உங்கள் மதம் மட்டுமே இருக்க வேண்டும் பிற மதங்கள் இருக்கக்கூடாது என மதம் பரப்ப எல்லா வித தந்திரங்களையும் செய்கிறீர்கள். உங்கள் மதத்தவர் தவறு செய்தால் கண்டிக்காமல் ஆதரிக்கிறீர்கள். அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர முனைப்பு காட்டுவதில்லை. அவர்களின் தவறுகளை மறைக்க முயற்சிக்கிறீர்கள். உங்கள் மதம் மாற்றும் செயல்களால் ஏராளமான இந்து குடும்பங்களில் நிம்மதி சீர்குலைந்து விட்டது. யார் எந்த மதத்தை பின்பற்றினால் என்ன? நன்மை செய்கிறவர்களை பாராட்டவேண்டும். தவறு செய்கிறவர்களை கண்டிக்க வேண்டும் என இந்துக்கள் நினைப்பது போல் ஏன் உங்களால் இருக்க முடியவில்லை?. இது சரியா என்று சிந்தித்து பாருங்கள்.

     இந்து கோவில்களில் நடைபெறும் அற்புதங்களை நம்புவதில்லை. கோவில்களில் சிற்பங்களில் ஏராளமான அற்புதங்களை செய்துள்ளனா் நம் முன்னோர்கள். அவற்றை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட வருவதில்லை. தேன் உறிஞ்சும் பிள்ளையார், ஆறுமாதத்திற்கொரு முறை நிறம்மாறும் பிள்ளையார், பானகம் குடிக்கும் நரசிம்மா், நெருப்பின் மீது நடக்கும் அக்னி காவடி,  முருகனின் உடலில் வியர்வை வியர்ப்பது போன்ற கண்முன்னால் அன்றாடம் ஏராளமான அற்புதங்கள் நடந்தும் அவற்றை நம்புவதில்லை. ஆனால் ஆபிரகாமிய நாடுகளில் ஏதோ ஒரு காலத்தில் நடந்ததாக கூறப்படுபவற்றை  கண்களை மூடிக்கொண்டு நம்புகிறீர்கள். உங்கள் நம்பிக்கையே சரி மற்றவர்களின் நம்பிக்கை தவறு என எண்ணுகிறீர்கள்.

     இவை எல்லாவற்றையும் விட இந்துக்களின் பரந்த மனப்பான்மையினால்தான் நாம் வாழ்கிறோம் என்ற நன்றி உணர்வு உங்களிடம் இல்லாமல் இந்துக்களை அழிக்கும் முயற்சியில் இறங்குகிறீர்கள். இரு ஆபிரகாமிய மதங்களை தவிர இந்தியாவில் உள்ள வேறு எந்த மதத்தினரும் இதுபோன்று செய்யவில்லை. இந்துக்கள் மதம் பார்க்காமல் மனிதர்களாக பார்த்து உங்களுடன் வியாபாரம் செய்வதாலும் உங்களிடம் தொழில் செய்வதாலும் உங்களை நிராகரிக்காமல் உதவுவதால்தான் இந்த மண்ணில் வாழ முடிகிறது என சிந்திப்பதே இல்லை.

     இந்து மதத்தில் சாதி பிரிவுகளுக்கிடையே தீண்டாமை உள்ளது என்கிறீர்கள். உங்கள் மதத்திலேயே ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகளுக்கிடையே ஒற்றுமை அன்பு சகோதரத்துவம் இல்லை. ஒருவரை ஒருவர் தாழ்ந்தவர்களாக கருதி சண்டையிட்டுக் கொள்கிறீர்கள். ஒரே பிரிவில் கூட அதிகாரம் பதவி பணத்திற்காக அடித்துக்கொள்கிறீர்கள். இந்துக்களின் சாதி சண்டைகளில் எந்த சாதியும் அழிந்ததில்லை. அது பங்காளி சண்டைபோல் சில தினங்களில் முடிந்துவிடும். ஆனால் உங்கள் மதத்தினரால் பூண்டோடு அழிக்கப்பட்ட இனங்கள் ஏராளம்.

     நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் காரணமாக இந்த தேசத்திற்கு எதிராக சதி செய்யும் அந்நிய சக்திகளுக்கு துணை போகின்றீர்கள். வெளிநாடுகளில் பணத்தை பெற்றுக்கொண்டு பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி இந்த நாட்டின் மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தி போராட்டங்களை நடத்தி ஒற்றுமையையும் அமைதியையும் குலைத்து நாட்டின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறீர்கள். அந்த நாடுகள் நம் நாடு வல்லரசாக மாற வேண்டும் என்பதற்காக நிதியை வழங்கவில்லை. நம் நாடு சிதறிபோக வேண்டும் என்பதற்காக  பணத்தை வாரி இறைக்கின்றன. இந்த நாடு முழுவதும் உங்கள் மதம் ஆள வேண்டும் என்ற எண்ணத்தை தவிர ஒற்றுமையாக அமைதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

     உலக வரலாற்றில் உங்கள் மதத்தின் காரணமாகதான் ஏராளமான படுகொலைகள் அரங்கேறியிருக்கின்றன. உங்கள் மதத்தவர்களே உங்கள் மதத்தின் பிற பிரிவினரை வேட்டையாடிய வரலாறும் உண்டு. உங்கள் மதத்தினரால் கொலை செய்யப்பட்ட இந்துக்கள்தான் அதிகமே தவிர பெரும்பான்மையாக இருந்தும் இந்துக்களால் கொலைசெய்யப்பட்ட உங்கள் மதத்தவர் மிகமிக குறைந்த சதவீதத்தினரே. சரி உங்கள் மதத்தை பின்பற்றுவதால் இந்துக்களை விட என்ன நன்மையை உங்கள் வாழ்க்கையில் அடைந்துவிட்டீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். உங்கள் மதத்தவருக்கு வியாதிகள் வரவில்லையா? அனைவரும் கோடீஸ்வரர்களாகி விட்டீர்களா?  மதசகிப்புதன்மையை இழந்து பிற மதங்களின் மீது வெறுப்பை உமிழ கற்றுக்கொண்டதை தவிர எந்த நன்மையும் ஏற்படவில்லை.

மதத்தின் காரணமாக இந்த நாடு பிளவுபட்டது போதும். பாக்கிஸ்தானில் வசிப்பவர்களின் முன்னோர்களும் இந்துக்கள்தான். அவர்களும் இந்தியாவில் உள்ள ஏதோ ஒரு சாதியை சார்ந்தவர்களாக இருந்தவர்கள்தான். அவர்கள் ரத்தம் வேறல்ல. ஆனால் மதம் மாறியதால் சொந்த ரத்த உறவுகளை அழித்துக்கொண்டு நிம்மதியின்றி வாழ்கின்றனர். மாற்று மதத்தினரின் உயிருக்கோ உடமைகளுக்கோ எந்த பாதுகாப்பும் இல்லை. ஆனால் பாரதத்தில் ஆயிரம் ஜாதிகள் மொழிகள் பிரிவுகள் இருந்தாலும் சபரி மலை, கும்பமேளா, காசி போன்ற இடங்களில் உணவும் தங்குமிடமும் இலவசமாக பாகுபாடு இன்றி வழங்குகின்றனர். ஒருவரை ஒருவர் ஐயப்பனாக, முருகனாக, சிவனாக, அம்பாளாக கருதி அவர்களுக்கு உணவளிப்பது இறைவனுக்கு கொடுப்பதற்கு சமம் என கருதுகின்றனர்.  

உலகில் உயர்ந்த மதம் எது என்று ஸ்வாமி விவேகானந்தரிடம் கேட்டபோது காட்டுமிராண்டிகளாக இருப்பவர்களை மனிதனாகவும் மனிதனை தெய்வமாகவும் உயர்த்தும் மதம் எதுவோ அதுவே உயர்ந்த மதம் என்று கூறினார். இது இந்து மதத்திற்கு மட்டுமே பொருந்தும்.

     எனவே அன்பு சகோதர சகோதரிகளே. இந்த புண்ணிய பூமியாம் பாரத மண்ணில் பிறந்திருப்பதே நீங்கள் செய்த மாபெரும் பாக்கியம். நம் முன்னோர்களின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ளுங்கள். அவர்கள் எழுதிய நூல்களை வரலாற்றை படித்து பாருங்கள்.  அறிவியல் பூர்வமான ஆரோக்கியமான உலகத்தையே நேசிக்கும் நமது முன்னோர்களின் கலாசாரம் பண்பாட்டின் சிறப்பினை அறிந்து பேணி பாதுகாக்க முன்வாருங்கள். இந்துக்கள் எந்த விளம்பரமும் செய்யாமல் எந்தவித மதமாற்ற முயற்சியும் செய்யாமலேயே ஸ்டீபன் நேப், டிஏ ஜோசப்,  மரியா விர்த் சகோதரி நிவேதிதா ஹென்றி போர்ட் போன்ற ஏராளமான வெளிநாட்டவர்கள் இந்து மதத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளனா்.. வெளிநாட்டவர்கள் நம் கலாசாரத்தின் பெருமையை அறிந்து மாறி வரும்போது இந்த மண்ணில் பிறந்த நீங்கள் ஏன் உங்கள் முன்னோர்களின் உயர்ந்த வழியை பின்பற்றக்கூடாது? சிந்தியுங்கள்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக