பின்பற்றுபவர்கள்

புதன், 10 அக்டோபர், 2018

நான் ஏன் கிறிஸ்தவத்தை வெறுக்கிறேன்.

     என் உறவினர் ஒருவருக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்தன. ஐந்தும் பெண்குழந்தைகளாக பிறந்ததால் வெறுத்து குடும்பத்தை விட்டு பிாிந்து எங்கோ சென்றுவிட்டார். கணவன் இல்லாமல் 5 குழந்தைகளையும் வளர்க்க அந்த அம்மையார் மிகவும் சிரமப்பட்டார். 5வது வகுப்புக்குமேல் படிக்க வைக்காமல் தீப்பெட்டி கட்டை அடுக்கி வளர்த்து பெரியவர்களாக்கினார்

       முதல் பெண் நிறமாக அழகாக இருப்பாா். அவரை மணந்துகொள்ள ஒரு மளிகை கடை வைத்திருந்த கிறிஸ்தவர்  ”வரதட்சணை எதுவும் வேண்டாம். மதம் மாறினால் போதும்” என்று பெண் கேட்க மதமாறிகள் நாடார்கள் அல்ல என்று அறியாமல் திருமணம் செய்து வைத்தார். திருமணமாகி மதம் மாறிய மூத்தமகள் தன் தங்கைகளையும் மதமாற்ற முயற்சி செய்தார். 2 தங்கைகளுக்கு இந்து குடும்பத்தில் திருமணம் நடந்தது. 3வது தங்கை மொண்டி. அழகாகவும் இருக்க மாட்டார். ஆஸ்த்மா போன்ற உடல்நலக்கோளாறுகளும் உண்டு. எனவே வரன் கிடைக்காமல் 4வது தங்கைக்கு திருமணம் நடந்தது. அக்காவின்  மதம் மாற்று முயற்சியில் அவரது தாயாரும் மதம் மாறினார். மொண்டி தங்கையையும் தாயையும்  ஏசப்பா குணமாக்குவார். செழிக்க பண்ணுவார். செபகூட்டத்திற்கு வா என்று சர்ச்சுக்கு அழைத்துச்சென்று இருவரையும் மதம் மாற்றினார்.

             வீட்டில் விளக்கு வைப்பதை நிறுத்தி விட்டனா். தாயும் மொண்டி தங்கையும். 2வது தங்கைக்கு 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஏசப்பா குழந்தை கொடுப்பாா் என்று அவரையும் மதம் மாற்றிவிட்டார். ஆனாலும்  7 ஆண்டுகள் கழித்து காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல் குழந்தை பிறந்தவிட  ஏசப்பா குழந்தை கொடுத்தார். என்று தீவிர விசுவாசியாகிவிட்டார். அதே சமயம் குழந்தை இல்லாத ஒரு கிறிஸ்தவ பெண்மணியிடம் ஒருவர் அம்மனுக்கு தொட்டில் கட்ட நேர்ந்துகொள்ளுங்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்ல ”அப்படி எல்லாம் எனக்கு குழந்தையே தேவையில்லை” என்றார். அவர் கணவரும் திடீரென்று மாரடைப்பினால் கர்த்தருக்குள் மரிக்க தனிமரமாக உள்ளார்.

                இந்நிலையில் திடீரென்று ஏசப்பா வியாபாரத்தை நட்டமாக்கிவிட குடும்பத்துடன் சென்னை சென்று விட்டனர். சென்னை சென்றவுடன் ஓரளவு வியாபாரம் நடக்க கடன் வாங்கி வீடு கட்டி குடியேறினார். ஒருமுறை அவர்கள் வீட்டில் நான் ஒருநாள் தங்க நேரிட அதிகாலையில் அவர் அழுத அழுகைகேட்டு பதறிப்போய் நான் பார்க்க ஜெபம் செய்து அழுகிறார் என்று தெரிந்தது. அதுமுதல் அவர் வீட்டுக்கு செல்வதையே நிறுத்திவிட்டேன். அவருக்கு 2 பெண் 1 பையன். பெண் பிள்ளைகள் வளர கணவரின் அக்கா பையன்  மூத்த மகளுடன் தொடர்பு வைத்து திருமண பேச்சு வந்த போது வீட்டை எழுதி கொடுத்தால்தான் திருமணம் என்று சொல்ல திருமணம் தடைபட்டது. வியாபாரமும் திடீரென்று சரிந்துவிட வங்கியும் கடனை அடைக்க அழுத்தம் கொடுக்க கடன் பிரச்னை தாங்காமல் எந்த கணவருக்காக மதம் மாறினாரோ அந்த கணவர் திடீரென்று ஒருநாள் குடும்பத்தை விட்டு ஓடிவிட்டார். இந்த சுழ்நிலையில் என் அப்பாதான் பண உதவி செய்து கடனிலிருந்து விடுவித்து வியாபாரம் மீண்டும் சீராக மகளுக்கு திருமணமும் செய்தார். 2வது மகளுக்கும் கிறிஸ்தவ மாப்பிள்ளையை திருமணம் செய்துவைத்தார். அந்த மாப்பிள்ளையின் கொடுமை தாங்காமல் ஒரு குழந்தையுடன் தாயிடமே வந்துவிட்டாள் அந்த பெண். திடீரென்று ஒருநாள் காணாமல் போன கணவர் காய்ச்சலுடன் திரும்பி வந்துவிட்டார். வேலை செய்ய இயலாத நிலையில் இருந்து அவரும் சிலவருடங்களில் கர்த்தருக்குள் மரித்துவிட்டார். மகனும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி திருமணமுமாகி டிரைவராக இருக்கிறான். கணவர் இறந்தவுடன் வீட்டை விற்றுவிட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டார். முதல் மகள் சென்னையில் இருக்க 2வது மகளுடனும் பேரனுடனும் மூட்டுவலியுடன் கோவில்பட்டியில் தற்போதும் கஷ்ட ஜீவனம் செய்து வருகிறார்.

              இவரால் மதம் மாற்றம் செய்யப்பட்ட மொண்டி தங்கைக்கு ஒருநாள் சர்ச்சிலேயே வலிப்பு வர, பயந்து போன பாதிரிகள் இனிமேல் சர்ச்சுக்கு வராதே. உன் வீட்டுக்கே ஹார்லிக்ஸ், பருப்பு, பணம் எல்லாம் தருகிறோம் என்று வீட்டுக்கு வந்து காசு கொடுத்தனா். ஆனாலும் நோய் குணமாகாமல் சில வருடங்களில் அவரும் கர்த்தருக்குள் மரித்துவிட்டார். சாகும்வரை கவனிக்காத கிறிஸ்தவர்கள் இறந்தவுடன் அவரை கிறிஸ்தவ முறைப்படிதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று பிரச்னை செய்து கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்தனா். இறந்த வீட்டிலேயும் பாதிரி 10 நிமிடம் செபம் செய்து 1000 ரூபாய்க்குமேல் காணிக்கை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். தாயையும் தங்கையையும் மதம் மாறிய இரண்டு பேரும் பார்த்துக்கொள்ளவில்லை. அவர்களை பராமாித்தது இந்து சகோதரிகள்தான்.  இந்த குடும்பத்தில் இந்து சகோதரிகள் குடும்பம்தான் ஓரளவு நன்றாக உள்ளது.

             இவர்கள் மதம் மாறி எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. இந்து சகோதரிகள் மற்றும் இந்து சுற்றங்களுடன் கோவிலுக்கு செல்லாமல் கொடை விழாக்களில் கலந்துகொள்ளாமல் வாழ்க்கையை வீணடித்ததைத் தவிர எந்த நன்மையையும் இவர்கள் பெறவில்லை. இவர்களை இந்து சகோதரிகள் புறக்கணித்திருந்தால் இவர்கள் நிலைமை இன்னும் பாிதாபம்.  கர்த்தரை நம்பி செழிக்கவும் இல்லை. வியாதி குணமாகவும் இல்லை. கிறிஸ்தவ விளம்பரங்களில் ஏமாந்து மதம் மாறியோர் மீண்டும் தாய்மதம் திரும்பி விடாமல் இருக்க பாதிரிகள் யோபுவின் கதையைக்கூறி எந்த துன்பம் வந்தாலும் மதம் மாறாமல் இருங்கள் என்று மூளைச்சலவை செய்துவிடுகின்றனா். எந்த துன்பம் வந்தாலும் இந்து மதம் மாறி கிறிஸ்தவராகி விட வேண்டும். ஆனால் கிறிஸ்தவன் மதம் மாறிவிடக்கூடாது என்ற தத்துவத்தை பாதிரிகள் சிறப்பாக கடைபிடிக்கின்றனர்.

              ஏசப்பாவை நம்பி மதம் மாறி வியாதி குணமாகாதவரை சர்ச்சுக்குள் வரவிடாமல் விரட்டியடித்துவிட்டு செத்தவுடன் உாிமை கொண்டாடிய சம்பவம் அதிகமாகவே என்னைப் பாதித்துவிட்டது. இப்படி எல்லாம் கேவலமாக இவர்கள் ஏன் நடந்துகொள்ள வேண்டும் என்ற வெறியில்தான் இந்த மூடர்களை திருத்த வேண்டும் என்று பதிவுகள் செய்துகொண்டு இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக