பின்பற்றுபவர்கள்

வியாழன், 18 மே, 2017

கோயில் சிற்பங்களில் தெரிவது ஆபாசமா?


கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும்  சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும் குழப்பத்தையும் தருகிறதே  ஏன்? என்று நிறையர் கேள்வி  கேட்கிறார்கள்.

தொடர்ந்து கூடவே இன்னும் சிலர் சில கேள்விகளையும் கேட்கிறார்கள்.

*கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தால் நம் மனம் அலைபாயுமே பிறகு ஏன்? இங்கு இவ்விதம் காட்சியாக்கி இருக்கிறார்கள் என்று.

*இவ்வாபச வடிவங்களை கண்ட பிறகு எப்பிடி? நம்மால் முழு மனதுடன் தெய்வத்தைத் தொழ முடியும்?. ஒரு வேளை காமமும் தெய்வீகமும் ஒன்றோ?......

*மிகப் பெரிய மர்மம் இந்தக் காமத்துக்கும் தெய்வீக நம்பிக்கைகளுக்கும்  இடையில் இருக்குமோ?. என என் மனசு நினைக்குதுங்க?

*இப்படியானபல கேள்விகள்.......

அப்படியான கேள்விக்கானவர்களுக்கு  பழுத்த பதில் விளக்கமானதாக இருக்கிறது!

பொதுவாக எல்லோரும் நினைக்கும் விசயம், "எல்லாம் வல்ல இறைவனை" காண வேண்டுமென்றால் "காம என்னம் தடையாகயிருக்கும்.

அத்தகைய காமத்தை, காம என்னத்தை, குரோதத்தைக் (பலி பீடம்) கடந்து வந்தாலே இறைவனை அடையலாம்" என்பார்கள்.

இதனை சற்று சிந்தித்துப் பாருங்கள். கோபுரத்தை ஊருக்கு வெளியிலிருந்தே
பார்க்கும் போது, நம் கண்ணில் படும் வானளாவிய கோபுரம் ரொம்ப அழகாயிருக்க்கிறது என்று தோன்றுகிறதல்லவா?

அக்கோபுரத்தை சற்று அருகில் சென்று காணும் ஆவல் மேலிட இன்னும் மிக அருகில் போவோம்.

கோபுரத்தை அண்ணாந்து  பார்ப்போம். அதில் அடுக்கடுக்காக பல பொம்மைகள் தெரிகிறது. அதோடு பல வரிசைகளில் உள்ள உருவங்களில் சில ஆபாச சிலைகளாக இருப்பதைக் காண்கிறோம்.

அச் சிலைகள் கூட்டத்தில் யோகியர்களும், முனிவர்களும், உழவர்களும், குறவன் குறத்திகளும், பல அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டீர்கள் பலரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் காட்டப்பட்டிருக்கும். ஆனால், இவற்றில் ஆபாசமான தன்மை இல்லை.

வாழ்க்கையின் ஒட்டு மொத்தத்தைக் காட்டும் பலவகையான சிலைகளும் இதில் அமைந்து உள்ளன.

அவற்றில் உடலுறவுச் சிலைகளை மட்டும் நாம் தவிர்ப்பது நம் மதத்தின் வழக்கம் அல்ல.

வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு ஒரு முழுமையை உருவகிக்க முயலத்தான் அப்படிக்  காட்டப்பட்டிருக்கிறது.

ஆகவே துறவுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் காமத்துக்கும் இருக்கின்றது. இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்.

"நாம் நம் மனதைக் கட்டுப் படுத்தினால் உயர்வோம் என்பதை போதிக்கிறது.
நம் மனத்திலே சிறிதளவும் தெய்வ நம்பிக்கை இல்லை என வைத்துக் கொள்வோம்.

நம் மனதிலே தோன்றுவது என்ன? ஓகோ இந்தக் கோவிலுக்குள் சென்று
பார்த்தால் இன்னும் பல ஆபாசமான சிலைக் காட்சிகளையும் காண முடியுமோ? என்னும் எண்ணம் எழும்.

உள்ளே சென்றால் அங்கு காண்பது என்ன?
அதிகமான தூண்கள், பெரிய பெரிய மண்டபங்கள் இருக்கின்றன.

இம்மண்டபத்தில் மக்கள் எல்லோரும் கூடி வேத மந்திரங்களைக் கற்கவோ, ஆன்மீக சொற் பொழிவுகளைக் கேட்கவோ, இசை, நடனம், நாடகம் போன்றவற்றைக் கேட்டு, பார்த்து ரசிக்கவோ செய்வோம்.

வெளிப் பிராகாரம், நடுப்பிராகாரம், உள்பிராகாரம் என ஒவ்வொன்றையும் சுற்றிச் சுற்றி வருவோம். நல்ல வெளிச்சமாக இருந்த வெளிப் பிராகாரத்தில் இருந்து உள்ளே செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து
கடைசியில் இறைவன் இருக்கும் கருவறை வரை வந்து வழிபட்டு. அங்கு எண்ணெய் விளக்கின் ஒளியில் இறைவனின் உருவம் மங்கலாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம்.

அர்ச்சகர் ஒருதட்டில் அகல்விளக்கை ஏற்றி இறைவனின் சிலைக்கு முன்னே ஏற்றி இறக்கக் காட்டுகிறார். இப்போது ஈசனின் முகம் நன்றாகத் தெரிகிறது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அடுத்த வினாடியே நம் கண்களை இறுக்க மூடிக் கொண்டு ஆண்டவனை கண்ணுக்குள் கொண்டு வந்து நினைக்கிறோம்.

அப்போது நம் மனக் கண்ணின் உள்ளே  ஈசனின் உருவம் தெரிகிறது.

"உன்னுள்ளே உற்றுப் பார். என்னைக் காண்பாய்"
என்ற உன்னத தத்துவம்தான் இது. அதை அப்போது உணரப்பெறுகிறோம்.

நம் இல்லற வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவையே. எதையும் தவறாக நினைக்கின்ற போதுதான் அதன் புனிதம் அகன்று ஆபாசம் நம்மைத் தொற்றாக்கிக் கொள்கிறது.

புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால்
குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்?

உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி எல்லாமே உயிர் உள்ளவைதான். இவை எல்லாமே இனப்பெருக்கம் செய்கிறது.

இந்த நோக்கில் சிந்தித்தால், தாம்பத்ய உறவு என்பது, திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது என்பது தெளிவுறும்.

இந்தக் கலியுக வாழ்வில் சினிமா, நாடகம், டிவி போன்றவைகள் வந்து,
இந்தப்புனிதத்தை ஆபாசமாக்கிக் காட்டி நமக்கு வக்கிரபுத்தியை உணர்த்தி விட்டது.

அக்காலத்தில், கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனித இனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்களாம். இதை நாம் ஆராய்ந்து பார்த்து  ஆபாசமாக்க கூடாது.

இந்து கோவில்களில் ஆபாசம் எதற்கு? இதற்கான காரணம் மனிதனின் எண்ணத்தில் இருந்து ஆரம்பம் ஆகிறது. காமம் இயற்கையின் இனவிருத்திற்கு முக்கியமான ஒன்று.

அக்காமம் ஒவ்வொரு உயிரினத்திர்கும் ஒவ்வொரு விதமான தன்மையில் மாறுபடும். மனிதனின் வாழ்நாளில் சிறுபகுதியே காமம்.

அக்காமம் புனிதமானது. அதுவே நாளின் அனைத்து பொழுதிலும் மனித தன்மைக்கு அப்பாற்பட்டு மிருகத்தின் நிலையில் கிரகிக்கும் பொழுது அக்காமம், வக்கிர காமமாக மாறுகிறது. இதையே வக்கிர புத்தி என்றார்கள்.

"இதற்காகத்தான் நம் முன்னோர்கள் நல்லதையே நினை நல்லது நடக்கும்" என்று சொன்னார்கள்.

"ஊன் பற்றி நின்ற உணர்புற மந்திரம் தான் பற்றி நிற்கும் தலைபடும் தாமே"
என்கிறது திருமந்திர திருபதிகம்.

மூலமும் உடலால் பற்றிய பற்றுகளால் நன்மை, தீமை தானே விளையும் என அறியமுடிகிறது.

கோவிலின் உள்ளே ஏன் வக்கிர சிலைகள் அமைத்தார்கள்?
வெளி பிரகாரத்திலே கெட்ட எண்ணம் கொண்டவர் நிற்க, கருவறையில் நல்ல எண்ணம் கொண்டவர் நிற்க என பிரிப்பார் இல்லாமலேயே வகைபடுத்தி புறம் தள்ளினார்கள்.

ஆக, நல்ல எண்ணம் கொண்டவர்கள் வக்கிரத்தை தாண்டி மூலத்தை அடைகிறார்கள்.

"வக்கிரம் என்றுமே வெளியில் இருக்கும் அடிமையாக" எண்ணத்தின் அதிர்வலைகளின் குவியலே பிரார்தனை. அப்பிரார்தனையில் தீய எண்ணங்களின் அதிர்வுகள் கலக்காமல் இருக்கவும் இது போன்ற சூட்சம வழிமுறைகளை வகுத்தனர் நம் முன்னோர்கள்.

முன்னோர்கள் செயல் காரணம் இல்லாமல் இல்லை. செயல் அறியாத சிலரே குறை கூறி வக்ரத்தை தோன்ற வைக்கிறார்கள்.



ஒரு ஓவியன் நிா்வாண ஓவியம் வரைந்தால் அதை நிா்வாணமாக பாா்க்காமல் கலை அம்சமாக பாா்க்க வேண்டும் என்று சொல்பவா்கள்தான் கோவிலில் சிற்பங்களை ஆபாசமாக பாா்க்கிறாா்கள்.
         திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக