பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கலாமா?

இன்டா்நெட்டில் குரான் பற்றி தெரிந்துகொள்வோமே என்று படிக்க ஆரம்பித்தபோது கயவன் கஅபுவை கொல்லுதல் என்ற சம்பவத்தைப் படித்தவுடன் மனம் பதறி விட்டது. இதன்பின்தான் முஸ்லிம்கள் நம்பிக்கைக்கு உரியவா்கள் இல்லை என்று தோன்றியது

முழு வரலாற்றை கீழே படியுங்கள்.
கஅப் இப்னு அஷ்ரஃப்“- இவன் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் கடும் குரோதம் கொண்டவன். நபியவர்களுக்கு எப்போதும் நோவினை தருபவன். இவன் முஸ்லிம்களுடன் போர் தொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறி வந்தான். இவன் யூதர்களில் நப்ஹான் பிரிவைச் சேர்ந்த ‘தை’ இனத்தைச் சேர்ந்தவன். இவனது தாய் யூதர்களில் நழீர் இனத்தைச் சேர்ந்தவள். இவன் பெரிய செல்வந்தனாக இருந்ததுடன் நல்ல அழகுடையவனாகவும் இருந்தான். இவன் அரபியில் நல்ல கவிபாடும் திறமையுடையவன். இவனது கோட்டை மதீனாவின் தென் கிழக்கில் நளீர் இன யூதர்களின் வீடுகளுக்குப் பின்னால் இருந்தது.


முஸ்லிம்கள் போரில் வெற்றி பெற்று விட்டனர் என்று அல்லாஹ்வின் எதிரியாகிய இவன் அறிந்தவுடன், நபியவர்களையும் முஸ்லிம்களையும் இகழவும், முஸ்லிம்களின் எதிரிகளைப் புகழவும் செய்தான். மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டினான். இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் மதீனாவிலிருந்து மக்கா சென்றான். அங்கு முத்தலிப் இப்னு அபூ வதாஆ என்பவனிடம் தங்கினான். பிறகு குறைஷிகளில் கொலை செய்யப்பட்டவர்களுக்காக இரங்கல் பாட்டுப் பாடி, அழுது பிரலாபித்து இணைவைப்பவர்களின் உணர்வுகளைத் தூண்டினான். நபியவர்களின் மீது குரோதத்தை மூட்டினான். மேலும், நபியவர்களிடம் போர் புரிய அவர்களைத் தூண்டினான். ஒருநாள் அபூ ஸுஃப்யானும் மற்றவர்களும் அவனிடம் “உமக்கு எங்களது மார்க்கம் விருப்பமானதா? அல்லது முஹம்மது மற்றும் அவன் தோழர்களின் மார்க்கம் விருப்பமானதா? எங்கள் இரு சாரால் யார் நேர்வழி பெற்றவர்கள்?” என்று கேட்டனர். “அதற்கவன் நீங்கள்தான் நேர்வழி பெற்றவர்கள். நீங்களே சிறந்தவர்கள்” என்று பதிலளித்தான். இது குறித்து பின்வரும் இறைவசனம் இறங்கியது:

(நபியே!) வேதத்தில் சில பகுதி கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் பார்க்க வில்லையா? அவர்கள், சிலைகளையும் ஷைத்தான்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்களைச் சுட்டிக் காண்பித்து “இவர்கள் தாம் இறைநம்பிக்கையாளர்களை விட மிக நேரான பாதையில் இருக்கின்றனர்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 4:51)

இதே நிலையில் மதீனா திரும்பினான் கஅப். அங்கு நபித்தோழர்களின் பெண்களை தனது கவியில் இகழ்ந்தும் பழித்தும் பாடி அவர்களுக்குப் பெரும் நோவினை செய்தான்.

இவ்வாறு இவனது தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கவே, “கஅப் இப்னு அஷ்ரஃபின் கதையை முடிப்பது யார்? நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துன்பம் தருகிறான்” என்று நபி (ஸல்) கேட்டார்கள். இப்பொறுப்பை நிறைவேற்ற முஹம்மது இப்னு மஸ்லமா, அப்பாத் இப்னு பிஷ்ர், அபூ நாம்லா என்ற ஸில்கான் இப்னு ஸலாமா (இவர் கஅபின் பால்குடி சகோதரர் ஆவார்), ஹாரிஸ் இப்னு அவ்ஸ், அபூ அப்ஸ் இப்னு ஜப்ர் (ரழி) ஆகியோர் தயாரானார்கள். இந்தக் குழுவிற்குத் தலைவராக முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) நியமிக்கப்பட்டார்.
(இவன் மீது படைஎடுத்து போாிட்டு கொல்லவில்லை. மாறாக வஞ்சக திட்டம் தீட்டி முகமது கொல்கிறாா்)

நபிமொழி நூற்களில் இந்நிகழ்ச்சி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் சுருக்கத்தை நாம் இங்கு பார்ப்போம்:

நபி (ஸல்) “கஅப் இப்னு அஷ்ரஃபின் கதையை யார் முடிப்பது? நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துன்பம் தருகிறான்” என்றார்கள். முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு விருப்பமாக இருப்பின் நான் அவனைக் கொலை செய்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) “ஆம்!” என்றார்கள். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் “தங்களைப் பற்றி சில (மட்டமான) வார்த்தைகளை அவனிடம் கூற, நீங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும்” என்றார். நபி (ஸல்) “சரி” என்று கூறினார்கள்.

இதற்குப் பின் முஹம்மது இப்னு மஸ்லமா கஅபிடம் வந்தார். இதோ... அவர்களின் உரையாடல்:

முஹம்மது இப்னு மஸ்லமா: “இந்த மனிதர் (முஹம்மது) எங்களிடம் தர்மத்தைக் கேட்டு சிரமத்தில் ஆழ்த்துகிறார்.”

கஅப்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் விஷயத்தில் நீங்கள் அதிவிரைவில் சடைவடைந்து விடுவீர்கள்.”

முஹம்மது இப்னு மஸ்லமா: “நாங்கள் இப்போது அவரைப் பின்பற்றியிருக்கிறோம். அவரது முடிவு என்னதான் ஆகிறது என்று பார்க்கும்வரை அவரை விட்டு விலகுவதை நாங்கள் விரும்பவில்லை. அது சரி! நீ எங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மரக்கால் தானியங்களை கடனாகக் கொடுத்துதவு.”

கஅப்: “சரி! தருகிறேன். ஆனால், அதற்குப் பதிலாக என்னிடம் அடைமானம் ஏதும் வையுங்கள்.”

முஹம்மது இப்னு மஸ்லமா: “நீ எதைக் கேட்கிறாய்?”

கஅப்: “உங்கள் பெண்களில் சிலரை என்னிடம் அடைமானம் வையுங்கள்.”

முஹம்மது இப்னு மஸ்லமா: “நீ அரபியர்களில் மிக அழகானவனாயிற்றே. உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை அடைமானம் வைக்க முடியும்?”

கஅப்: “சரி! உங்களது பிள்ளைகளை அடைமானம் வையுங்கள்.”

முஹம்மது இப்னு மஸ்லமா: “எப்படி எங்கள் பிள்ளைகளை அடைமானம் வைப்பது? பிற்காலத்தில் அவர்களை யாராவது ஏசும்போது, இதோ இவன் ஒரு மரக்கால் இரண்டு மரக்காலுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன் என்று இழிவாகப் பேசுவார்களே! எனவே, நாங்கள் உம்மிடம் எங்களது ஆயுதங்களை அடைமானமாக வைக்கிறோம்.”

கஅப்: “சரி”

முஹம்மது இப்னு மஸ்லமா: “நாளை வருகிறேன்.”

கஅப் அங்கிருந்து புறப்பட்ட பின், நபித்தோழர் அபூ நாம்லாவும் கஅபைச் சந்தித்தார். அவரும் முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) செய்ததைப் போன்றே செய்தார். கஅபிடம் பல கவிகளைப் பற்றி பேசிவிட்டு “கஅபே! நான் ஒரு தேவைக்காக உன்னிடம் வந்திருக்கிறேன். அதை நீ பிறரிடம் கூறக்கூடாது” என்றார். கஅப், “அவ்வாறே நான் செய்கிறேன்” என்றான். அதற்கு அபூ நாம்லா, “கஅபே! இந்த மனிதர் (முஹம்மது) எங்களிடம் வந்தது எங்களுக்கு ஒரு சோதனையாக ஆகிவிட்டது. அரபியர்கள் எங்களைப் பகைத்துக் கொண்டனர் ஒன்று சேர்ந்து எதிர்க்கின்றனர் எங்களின் வியாபார வழிகளை அடைத்துவிட்டனர் இதனால் எங்களது பிள்ளை குட்டிகள் வறுமையில் வாடுகின்றனர் நாங்களும் பெரிய சிரமத்திற்குள்ளாகி விட்டோம்” என்று கூறி, மற்ற விஷயங்களை முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) பேசியவாறே பேசினார். பேச்சுக் கிடையில் என்னுடன் எனக்கு வேண்டிய சில நண்பர்களும் இருக்கின்றனர். நான் அவர்களை நாளை உன்னிடம் அழைத்து வர நாடுறேன். அவர்களிடம் நீ வியாபாரம் செய்யலாம். அவர்களுக்கும் உன்னால் முடிந்த நன்மைகளையும் செய்” என்று பேசிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

ஆக, முஹம்மது இப்னு மஸ்லமாவும் அபூ நாம்ளாவும் கஅபுடன் எதை நோக்கமாக வைத்து பேசினார்களோ அதில் வெற்றி கண்டனர். இவ்வாறு நாளுக்கு நாள் சந்திக்க இவர்களின் பழக்கம் நல்ல பலமடைந்தது. எனவே, இந்த இருவரும் தங்களுடன் ஆயுதங்களை எடுத்து வருவதை கஅப் தடை செய்யவிலை.

ஹிஜ் 3, ரபீஉல் அவ்வல், பிறை 14 சந்திர இரவில் இந்த சிறிய குழு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அக்குழுவுடன் ‘பகீஉல் கர்கத்’ வரை வந்து “அல்லாஹ்வின் பெயர் கூறி செல்லுங்கள்! அல்லாஹ்வே! இவர்களுக்கு நீ உதவி செய்வாயாக!” என்று கூறி வழியனுப்பி வைத்தார்கள். பிறகு தங்களின் இல்லம் திரும்பி தொழுகையிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதிலும் ஈடுபட்டார்கள்.

இவர்கள் கஅப் இப்னு அஷ்ரஃபின் கோட்டைக்கு வந்தனர். அபூ நாம்லா (ரழி) அவனைக் கூவி அழைக்கவே அவன் அவர்களிடம் செல்ல எழுந்தான். அவனது மனைவி அவனிடம் “இந்நேரத்தில் நீ எங்கு செல்கிறாய்? இந்த சப்தத்தில் இரத்தம் சொட்டுவதை நான் கேட்கிறேன்” என்று கூறினாள். (அதாவது அவளின் உள் மனது நடக்கப்போகும் அபாயத்தை உணர்ந்துவிட்டது போலும்.)

அதற்கு கஅப், “வந்திருப்பவரோ எனது சகோதரர் முஹம்மது இப்னு மஸ்லமாவும், எனது பால்குடி சகோதரர் அபூ நாம்லாவும்தான். வேறு யாருமில்லை. சங்கைமிக்கவர் ஈட்டி எறிய அழைக்கப்பட்டாலும் கூட அதையும் ஏற்று அங்கு செல்வார்” என்ற பழமொழியைக் கூறி, மனைவியைச் சமாதானப்படுத்தினான். பிறகு அவர்களை சந்திக்க இறங்கினான். அவன் நன்கு நறுமணம் பூசி இருந்தான். அவனது தலை நறுமணத்தால் கமழ்ந்து கொண்டு இருந்தது.

இது இப்படியிருக்க, அபூ நாம்லா தனது தோழர்களுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சொல்லி வைத்திருந்தார். அதாவது, “கஅப் நமக்கு அருகில் வந்தால் அவனது தலை முடியை பிடித்து நான் நுகருவேன். அவனது தலையை நன்கு நான் பிடித்துக் கொண்டதை நீங்கள் பார்த்தவுடன் அவன் மீது பாய்ந்து அவனை வெட்டுங்கள்.” இது அவர்களின் திட்டமாக இருந்தது.

கஅப் கீழே இறங்கி அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அபூ நாம்லா “கஅபே! ‘ஷிஅபுல் அஜுஸ்’ வரைச் சென்று, மீதி இரவு அங்கு பேசிக்கொண்டு இருப்போமே” என்றார். “நீங்கள் விரும்பினால் அவ்வாறே செய்யலாம்” என்று அவனும் கூறினான். அனைவரும் அங்கிருந்து வெளியேறி நடந்து சென்றனர். வழியில் அபூ நாம்லா, “இன்றைய நறுமணத்தைப் போல் நான் எங்கும் நுகர்ந்ததே இல்லை” என்றார். கஅப் இந்த புகழ்ச்சியில் மயங்கியவனாக “என்னிடத்தில் அரபுப் பெண்களில் மிக நறுமணமுள்ள பெண் ஒருத்தி இருக்கிறாள். அவளுக்காகத்தான் இந்த நறுமணம்” என்றான். அபூ நாம்லா, “நான் உனது தலையை நுகர்ந்துகொள்ள அனுமதி தருகிறாயா?” என்றார். அவன் “அதிலென்ன! நுகரலாமே!” என்றவுடன் தனது கையை அவனது தலைக்குள் நுழைத்து தானும் நுகர்ந்து கொண்டு தனது தோழர்களையும் நுகர வைத்தார்.

பின்பு சிறிது நேரம் சென்றவுடன் “நான் மீண்டும் நுகரலாமா?” என்றார். அவன் “சரி!” என்றவுடன் முன்பு போலவே இப்போதும் செய்தார்.

பின்பு சிறிது நேரம் சென்றவுடன் “மீண்டும் நுகரட்டுமா?” என்றார். அதற்கு அவன் சரி! என்றவுடன், தனது கையை அவனது தலைக்குள் நுழைத்து இறுக்க பிடித்துக் கொண்டு “இதோ... அல்லாஹ்வின் எதிரி மீது பாயுங்கள்” என்றார். அங்கிருந்த நபித்தோழர்கள் அவன் மீது வாட்களை வீசினர். ஆனால் அவன் சாகவில்லை. இதைப் பார்த்த முஹம்மது இப்னு மஸ்லமா தனது கூர்மையான கத்தியை எடுத்து அவனது தொப்புளுக்குக் கீழ் சொருகி, அவனது மர்மஸ்தானம் வரை கிழித்தார். அல்லாஹ்வின் எதிரி பெரும் சப்தமிட்டவனாக செத்து மடிந்தான். அவர்கள் அவனது தலையைக் கொய்து எடுத்துக் கொண்டனர். அவன் கத்திய கதறலில் அங்குள்ள கோட்டைகள் அனைத்திலும் விளக்குகள் எரிக்கப்பட்டன.

இக்குழுவினர் திரும்பினர். தோழர்களில் ஒருவன் வாளால் ஹாரிஸ் இப்னு அவ்ஸ் உடைய காலில் காயம் ஏற்பட்டு இரத்தம் சிந்திக் கொண்டிருந்ததால் அவர் சற்று பின்தங்கி விட்டார். இக்குழுவினர் ‘ஹர்ரத்துல் உரைஸ்’ என்ற இடம் வந்த போது தங்களுடன் ஹாரிஸ் வராததைப் பார்த்தவுடன் அங்கு சிறிது நேரம் எதிர்பார்த்திருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களைத் தேடி, ஹாஸும் அங்கு வந்து சேர்ந்தார். அவரைத் தூக்கிக் கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ‘பகீஉல் கர்கத்’ வந்தடைந்து அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினர். அவர்களின் சப்தத்தைக் கேட்ட நபி (ஸல்), தோழர்கள் அவனைக் கொலை செய்து விட்டார்கள் என்பதை அறிந்து அவர்களும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார்கள். பின்பு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தவுடன் “இம்முகங்கள் வெற்றியடைந்தன” என்று கூறினார்கள். அதற்கு அந்தத் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தங்களது முகமும் வெற்றியடைந்தது” என்று கூறி, அந்த ஷைத்தானின் தலையை நபி (ஸல்) அவர்களுக்கு முன் போட்டார்கள். அல்லாஹ்வின் எதிரி கஅபின் கதை முடிக்கப்பட்டதை நினைத்து நபி (ஸல்) அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்தினார்கள். ஹாரிஸின் கால் காயத்தைப் பற்றி அறியவே அதில் தங்களது உமிழ் நீரைத் தடவினார்கள். அவர் முழுமையாக சுகமடைந்தார். அதற்குப் பிறகு அவருக்கு வலி என்பதே இல்லை. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

தங்களின் தலைவன் கொல்லப்பட்டதை அறிந்த யூதர்களின் உள்ளங்களில் பயம் குடியேறியது. சுமூகமான நடவடிக்கை பலன் தராதபோது பலத்தைப் பயன்படுத்துவதற்கும் நபி (ஸல்) தயங்க மாட்டார்கள் என்று அறிந்தனர். எனவே, தங்களது தலைவர் கொல்லப் பட்டதற்காக கூச்சல், குழப்பம் ஏதுமின்றி அமைதியைக் கடைப்பிடித்தனர். முஸ்லிம்களுக்கு பணிந்து அவர்களுடன் செய்த ஒப்பந்தங்களை நிறைவேற்றி வாழ்ந்தனர்.
              முஸ்லிம்களில் பல நல்லவா்கள் இருக்கின்றனா் என்கின்றனா். ஆனால் அந்த நல்லவா்கள் தீவிரவாதிகளைக் கண்டிப்பதுமில்லை. காட்டிக் கொடுப்பதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக