பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

சகோதரியைக் கற்பழிக்கும் சகோதரன்-பைபிள் நீதிக்கதை


 11.சாமுவேல்.13.1 தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்கு தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். (கவனியுங்கள் தாவீதின் மகள் என்று குறிப்பிடப்படவில்லை. அதாவது தாவீதுக்கு பிறக்காதவள்) அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்

 அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள் . அவளுக்கு பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது. அம்னோனுக்கு தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி. அவன் இவனைப் பார்த்து ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன் என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து நீ வியாதிக்காரனைப்போல் உன் படுக்கையின் மேல் படுத்துக்கொள். உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது , நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம் கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவு செய்ய வேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரன் போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்க வந்தபோது, ராஜாவை நோக்கி என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களை பண்ணும்படி உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அப்பொழுது தாவீது, வீட்டுக்கு தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் , அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொன்னான்

 தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்கு போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு சட்டியை எடுத்து. அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள். ஆனாலும் அவன் சாப்பிட மாட்டேன் என்றான். பின்பு அம்னோன் எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்றான். எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான். அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறை வீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டு போனாள். அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, ” என் சகோதரியே , நீ வந்து என்னோடே சயனிஎன்றான். அதற்கு அவள், வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத் தகாது. இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதி கெட்டவர்களில் ஒருவனைப் போல ஆவாய். இப்போதும் நீ ராஜாவோடே பேசு. அவர் என்னை உனக்கு்த் தராமல் மறுக்க மாட்டார்என்றாள். அவன் அவள் சொல்லைக் கேட்க மாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான் அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும் அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால் நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான். அப்பொழுது அவள், நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும் இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள். ஆனாலும் வேலைக்காரனைக் கூப்பிட்டு, இவளை வெளியே தள்ளி கதவைப் பூட்டுஎன்றான். அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி கதவைப் பூட்டினான். தாமார் தன் தலையின் மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தலையின் மேல் வைத்து சத்தமிட்டு அழுதுகொண்டு போனாள். அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப் பார்த்து, உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே நீ மவுனமாயிரு. அவன் உன்னுடைய சகோதரன். இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான். தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான். இரண்டு வருடம் கழித்து அவனை விருந்துக்கு அழைத்து அவனைக் கொன்றான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக