பின்பற்றுபவர்கள்

திங்கள், 12 அக்டோபர், 2015

ஏசுவே பொய்


ஏசு என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம். அப்படி ஒருவா் வாழ்ந்ததாக ஏசுவின் காலத்தில் வாழ்ந்த எந்த யுத அறிஞா்களின் நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை.

பைபிளின் ஆரம்பமே அபத்தம். முன்னுக்கு பின் முரணாக உள்ளது. ஆதாமுடன் கர்த்தா் பேசுவது, ஆதாமின் மகன் தன் சகோதரனை கொலை செய்வது, அதை கர்த்தர் கண்டிப்பது என திரைப்படம் போல் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கதைக்கு ஆதாரம் பைபிள் தவிர வேறு கிடையாது. பைபிள் உலகம் தட்டை என்று கூறுகிறது.ஆதாம் ஏவாள் கதை கட்டுக்கதை என்று விஞ்ஞானம் நிரூபிக்கிறது. 

ஏசுவின் வம்ச வரலாறு மத்தேயுவும் லூக்காவும் முரண்பாடாக கூறுகின்றனா். இருவருக்கும் ஆதாம் வரையான பரம்பரை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. தீர்க்க தரிசிகள் கூறியுள்ளனா் என்று சில கிறி்ஸ்தவா்கள் கூறுவாா்கள். ஆனால் கர்த்தா் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறாா். எந்த தீர்க்கதரிசி ஏசுவின் பரம்பரை வரலாறை எந்த நூலில் கூறியுள்ளாா் என்ற விபரமும் இல்லை.

ஏசுவின் இளம் வயது சம்பவங்கள் ஒன்றுமே பைபிளில் குறிப்பிடப்படவில்லை. இராமனும், கிருஷ்ணனும் குழந்தைப் பருவத்தில் எத்தனை லீலைகள் செய்திருக்கின்றனா். அந்த மாதிரி ஒரு சின்ன சம்பவம் கூட ஏசு செய்ததாக பைபிளில் குறிப்பிடப்படவில்லை. ஏசு 10 வயதில் என்ன செய்தாா். 20 வயதில் என்ன செய்தாா் என்று யாருக்காவது தெரியுமா? இதில் ஏசு இந்தியாவுக்கு வந்தாா் என்று வேறு கதை கட்டுகிறாா்கள். எந்த வயதில் இந்தியாவுக்கு வந்தாா். யாரை சந்தித்தாா்? எத்தனை ஆண்டுகள் இருந்தாா்? என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஏசு கதை உண்மையாக இருந்தால்தானே இவற்றிற்கும் ஆதாரம் இருக்கும். கற்பனைக் கதாபாத்திரம் ஏசு பற்றி அவரவர் கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடுகிறாா்கள்.
பைபிளின் ஆதாரமான ஆதாம் ஏவாள் கதை பொய் என்று உறுதியாக நிரூபிக்கப்படும்போது ஏசுவின் கதை மட்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக